சுயேட்சை குடாட் எம்பி அன்வாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்

சுயேட்சை குடாட் எம்பி வெர்டன் பஹண்டா, பிரதம மந்திரி அன்வார் இப்ராகிம் தலைமையிலான ஐக்கிய அரசாங்கத்திற்கான  தனது ஆதரவை இன்று உறுதிப்படுத்தினார்.

நாட்டின் 10வது பிரதமராக அன்வாரை நியமித்த யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷாவின் ஆணையை தாம் மதிப்பதாக அவர் கூறினார்.

“பொதுத் தேர்தலில் என் மீது நம்பிக்கை வைத்த குடாட் நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கு மிக்க நன்றி.பிரச்சாரத்தின் போது நான் உறுதியளித்தபடி, குடாட் தொடர்ந்து அரசாங்கத்தை ஆதரிக்கும்.

இது நாடாளுமன்றத் தொகுதியின் நன்மைக்காகவும், வளர்ச்சியில் நாம் பின்தங்காமல் இருக்கவும், தொகுதியை சிறந்து விளங்க, மற்ற பகுதிகளுக்கு இணையாக இருக்கவும் இது உதவும்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

 

-FMT