மலேசியா, சீனா உறவுகளை மேம்படுத்த உறுதிமொழி – அன்வார்

மலேசியாவும் சீனாவும் மக்களின் நலன் மற்றும் செழிப்புக்காகவும் இருதரப்பு நலன்களுக்காகவும் உறவுகளைத் தொடர்ந்து வலுப்படுத்துவதில் உறுதியாக உள்ளன என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறினார்.

இன்று தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் ஒரு இடுகையில், அன்வார் சீனத் தூதர் ஓயாங் யுஜிங்(Ouyang Yujing) மற்றும் அவரது பிரதிநிதிகளிடமிருந்து நேற்று மரியாதை நிமித்தமான அழைப்பைப் பெற்றதாகவும், சந்திப்பின்போது கலந்துரையாடல்களை நடத்தியதாகவும் கூறினார்.

குறிப்பாக முதலீடுகளை ஈர்ப்பது, வர்த்தகத்தை மேம்படுத்துவது மற்றும் இரு நாட்டு மக்களுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துவது ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை மையமாகக் கொண்டு இந்தக் கலந்துரையாடல்கள் நடைபெற்றன.