நெரிசலான பகுதிகளில் ‘சிறிய’ GoKL  பேருந்துகளை அறிமுகப்படுத்த DBKL திட்டமிட்டுள்ளது

கோலாலம்பூர் சிட்டி ஹால் (DBKL) போக்குவரத்து வசதிக்காக GoKL இலவச பேருந்துச் சேவையை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது, குறிப்பாகப் போக்குவரத்து நெரிசல் மற்றும் சிறிய சாலைகளுள்ள புறநகர் பகுதிகளில்.

எவ்வாறாயினும், சில இடங்களில், குறிப்பாகக் குடியிருப்புப் பகுதிகளில் சாலைகள் குறுகலாக இருப்பதால், மோதல்கள் ஏற்படக்கூடும் என்பதால் பேருந்துகள் அளவில் மிகச் சிறியதாக இருக்கும் என்று கோலாலம்பூர் மேயர் மஹதி சே நாகா (Mahadi Che Ngah) கூறினார்.

“குடியிருப்புப் பகுதிகளில் உள்ள சாலைகள் நகர மையத்தில் உள்ளதைப் போலவே இல்லை, சில குறுக்குவெட்டுகள் உள்ளன, அவை GoKL பேருந்துகள் கடந்து செல்வது மிகவும் கடினம், இது ஒரு இலக்கை அடைவதில் தாமதத்தை ஏற்படுத்தும்,” என்று GoKL இலவச பேருந்து சேவையின் புதிய வழித்தடங்களில் சோதனை ஓட்டத்திற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.  அதாவது  Taman Fadason-MRT Sri Delima Line மற்றும்Jinjang-Matrade MRT Line.

பேருந்து வழங்குனர்களுடன் பேசி அதன் பொருத்தத்தை தீர்மானிக்கும் என்று கூறிய அவர், தற்போது GoKL பேருந்துகள் 13 மற்றும் 10 மீட்டர் நீளம் கொண்டதாக உள்ளது என்றார்.

இதற்கிடையில், இரண்டு புதிய வழித்தடங்களுடன், GoKL இலவச பேருந்துச் சேவை இப்போது 13 வழித்தடங்களில் இயங்குகிறது, மேலும் ஒவ்வொரு வழித்தடத்திற்கும் ஒரு நாளைக்கு 20,000 பயணிகளுக்குச் சேவை செய்வதை இலக்காகக் கொண்டிருப்பதாக மஹதி கூறினார்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை மொத்தம் 7.8 மில்லியன் பயணிகள் GoKL இலவச பேருந்து சேவையைப் பயன்படுத்தியுள்ளனர்.

GoKL இலவச பேருந்து சேவையைப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கட்டணம் விதிக்கும் முன்மொழிவில், இந்த விஷயம் இன்னும் விவாதத்தில் இருப்பதாகவும், அதைச் செயல்படுத்துவதற்கு முன் பல மேம்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் மஹதி கூறினார்.

பொருத்தமான கட்டணங்களை முடிவு  செய்தல், பேருந்துகளில் கேஜெட் வசதிகள் மற்றும் பிற பொருத்தமான வழிமுறைகள் ஆகியவை அடங்கும் என்று அவர் கூறினார்.

கடந்த ஆகஸ்ட் மாதம், முன்னாள் துணை கூட்டாட்சி பிரதேச அமைச்சர் ஜலாலுதீன் அலியாஸ், GoKL இலவச பேருந்து சேவையைப் பயன்படுத்துபவர்களில் 45.2% பேர் வெளிநாட்டினர் என்றும் எதிர்காலத்தில் அவர்கள்மீது கட்டணம் விதிக்கும் வாய்ப்பை நிராகரிக்கவில்லை என்றும் கூறினார்.