கொழும்பில் கடத்தப்பட்ட பிரபல வர்த்தகர் மரணம்

ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட பிரபல  வர்த்தகர் தினேஷ் சாப்டர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு – பொரள்ளை மயானத்தில் கார் ஒன்றிற்குள் கைகள் கட்டப்பட்டு, ஆபத்தான  நிலையில் குறித்த வர்த்தகர் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

கொழும்பில் பிரபல வர்த்தகர் இனந்தெரியாத கும்பலினால் கடத்தப்பட்ட நிலையில் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

52 வயதான தினேஷ் சாப்டர் என்ற பிரபல தொழிலதிபர் கடத்தப்பட்ட நிலையில், படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

பொரளை கனத்தையில் கார் ஒன்றிலிருந்து அவர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல தொழிலதிபரும் ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் தலைவர் தினேஷ் சாப்டர் என்பவரே இவ்வாறு கடத்தப்பட்டவர் ஆவார்.

 

 

 

-ibc