தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சகம் விரைவில் KPI யை அறிமுகப்படுத்தும்

தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சகம் விரைவில் அதன் முக்கிய செயல்திறன் குறிகாட்டிகளை (key performance indicators) அமைக்கும்.

KPIயை உருவாக்கப் பயன்படுத்தப்படும் கொள்கைகளை அமைச்சகம் அடையாளம் கண்டு வருவதாக அதன் அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில்(Fahmi Fadzil) கூறினார்.

“கடவுள் விரும்பினால், வரும் வாரங்களில் நாங்கள் KPIயை செயல்படுத்துவோம்,” என்று அவர் இன்று ‘Klik Dengan Bijak’ முன்முயற்சியின் 10 வது ஆண்டு விழாவைத் தொடங்கி வைத்தபின்னர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மற்றும் 27 கேபினட் அமைச்சர்கள் ஞாயிற்றுக்கிழமை புத்ராஜெயாவில் உள்ள ஶ்ரீ பெர்டானா வளாகத்தில் ஒரு ரிட்ரீட்டில் கலந்து கொண்டனர்.

ஒற்றுமை அரசாங்கத்தின் திசைகுறித்து பிரதமரும் அமைச்சர்களும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள இந்த ரிட்ரீட் சரியான இடம் என்று ஃபஹ்மி கூறினார்.

தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சகம், ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் ஒவ்வொரு அமைச்சகத்தின் சாதனைகள்பற்றிய செய்திகளைப் பல்வேறு தளங்களில் தொடர்ந்து வெளியிடும் என்றார்.

அமைச்சின் சாதனைகள் என்ன என்பதை மக்கள் புரிந்துகொள்வதற்கும், அறிந்து கொள்வதற்கும், பார்ப்பதற்குமான முயற்சியின் ஒரு பகுதியாகும் என்று அவர் மேலும் கூறினார்.

ஒவ்வொரு அமைச்சகமும் சமூக ஊடக வழங்குநர்களுடனான தனது அமைச்சகத்தின் நல்ல உறவு, சமூக ஊடகங்களில் போலி செய்திகள் பரவுவதைத் தடுக்க உதவும் என்றும் ஃபாஹ்மி கூறினார்.