ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் இனவெறி கருத்து தெரிவித்ததற்காக ஹாக்கி வீரர்  இடைநீக்கம்

பிரபல இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சிகுறித்து இனவெறி கருத்து தெரிவித்ததற்காகத் தேசிய மகளிர் ஹாக்கி வீராங்கனை ஹனிஸ் நதியா ஓன்(Hanis Nadiah Onn) நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதிலிருந்து  இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

SEA விளையாட்டுப் போட்டிகளும் 2023, மே மாதம் கம்போடியாவில் நடைபெற உள்ளதாக இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அமைச்சகத்தின் படி, தேசிய விளையாட்டு கவுன்சில் (MSN) மற்றும் மலேசிய ஹாக்கி கூட்டமைப்பு (KHM) ஆகியவற்றால் அமைக்கப்பட்ட கூட்டுக் குழுவால் இந்த முடிவு எடுக்கப்பட்டது

ஹனிஸ் இந்தக் காலம் முழுவதும் அணுகுமுறையில் நேர்மறையான மாற்றத்தைக் காட்டினால் KHM முடிவை மறுமதிப்பீடு செய்யும்.

“இந்த நடவடிக்கை ஹனிஸ் மற்றும் பிற தேசிய விளையாட்டு வீரர்களுக்கு அவர்களின் சமூக ஊடக இடுகைகளில் எப்போதும் கவனமாக இருக்க ஒரு நினைவூட்டலாகவும் பாடமாகவும் இருக்கும் என்று குழு நம்புகிறது,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சின் கூற்றுப்படி, ஹனிஸ் (மேலே) தனது செயல்களுக்கு வருத்தம் தெரிவித்திருந்தார், அதற்காகப் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார், மேலும் அவதூறான இடுகையை நீக்குவதன் மூலம் தீர்வு நடவடிக்கைகளை எடுத்தார்.

“ஹனிஸ் தான் ஒரு இனவாதி அல்ல என்று வலியுறுத்தினார், ஏனெனில் அவர் ஜொகூர், குளுவாங்கில் ஒரு பல இன சமூகத்தில் வளர்ந்தார், மேலும் பல இந்திய நண்பர்களைக் கொண்டுள்ளார்”.

“பயிற்சி அமர்வுகள் மற்றும் போட்டிகளின்போது ஹனிஸின் பணிவான மற்றும் ஒழுக்கமான நடத்தைக்குச் சான்றளித்த தேசிய மகளிர் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் முகமட் நசிஹின் நுப்லி இப்ராகிமையும்(Mohd Nasihin Nubli Ibrahim) குழுத் தொடர்பு கொண்டது,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் கருத்து’

இவை அனைத்தும் இருந்தபோதிலும், இன உணர்வுகளை எழுப்பிய புண்படுத்தும் இடுகையில் ஹனிஸ் குற்றவாளி என்று குழு இன்னும் கண்டறிந்தது.

“ஒரு தேசிய ஹாக்கி வீரராக, ஹனிஸ் அணி மற்றும் KHM இன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் கருத்தை வெளியிட்டதற்காகக் குற்றவாளியாகக் காணப்பட்டார், இது கூட்டமைப்பின் நெறிமுறைகளுக்கு எதிரானது.”

கடந்த மாதம், இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா இயோ(Hannah Yeoh) சமூக ஊடகங்களில் ஹனிஸின் இடுகைகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார், இது இணையத்தில் பரவியது.

ஜனவரி 28 அன்று புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் ரஹ்மானின் கச்சேரியில், 70,000 பேர் கொண்ட கூட்டத்தில்  இன்ஸ்டாகிராம் இடுகையில் ஹனிஸ் ஒரு வெறுக்கத் தக்க கருத்தைத் தெரிவித்துள்ளார்,

தனது கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் மன்னிப்பு கோரினார், மேலும் ஹாக்கியில் தனது தசாப்தகால ஈடுபாட்டின்போது, “மலேசியாவிற்காகப் போராடிய அனைத்து இனங்களின் நண்பர்களும் தன்னைச் சூழ்ந்திருந்தனர்,” என்று கூறினார்.

முன்னாள் அமைச்சர் ரபிதா அஜீஸும்(Rafidah Aziz) இந்த விவகாரம்குறித்து கருத்து தெரிவிக்கையில், ஒரு இனத்தைச் சிறுமைப்படுத்துபவர்களுக்கு இந்த நாட்டில் இடமில்லை என்றார்.