கெடாவில் அரிய மண் ‘திருட்டு’ குறித்து RCI விசாரிக்கக் கிராம மக்கள் கோரிக்கை

கெடாவின் சிக்கில்(Sik) உள்ள புக்கிட் எங்காங்(Bukit Enggang) வனக் காப்பகத்தைச் சுற்றியுள்ள கிராமவாசிகள், அந்தப் பகுதியிலிருந்து அரிய மண் கூறுகள் (rare earth elements) திருடப்பட்டது குறித்து ராயல் விசாரணை ஆணையத்தை (Royal Commission of Inquiry) அமைக்குமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு முன்கூட்டியே பெறப்படாததால் சுரங்க நடவடிக்கைகள் சட்டவிரோதமாக இருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

54 வயதான சுல்கிப்ளி ஹசன்(Zulkifly Hassan) என்ற கிராமவாசி கூறுகையில், சுரங்கம் சட்டப்பூர்வமானது என்றால், நிறுவனம் ஆவணமற்ற வெளிநாட்டினரை வேலைக்கு ஈடுபடுத்த வேண்டியதில்லை.

“அவர்கள் (வெளிநாட்டினர்) குண்டர்களைப் போல நடந்துகொள்கிறார்கள், அவர்களின் இருப்பு கிராமவாசிகள் உட்பட உள்ளூர் மக்களுக்குப்  பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கலாம்,” என்று அவர் இன்று புக்கிட் எங்கங் ஆர்.இ.இ(Bukit Enggang REE) சுரங்க தளத்தின் நுழைவாயிலில் நடந்த அமைதியான ஆர்ப்பாட்டத்தின்போது கூறினார்.

சுல்கிஃப்லியின்(Zulkifly) கூற்றுப்படி, சுரங்க நடவடிக்கைகள் பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன, மேலும் கிராமவாசிகள் காவல்துறை, மாநில வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறையிடம் புகார் அளித்தும் எந்தப் பயனும் இல்லை.

“இது மந்திரி பெசார் முகமது சனுசி முகமது நோரின் தொகுதியில் (Jeneri) நடக்கிறது, ஆனால் அவர் இங்கே என்ன நடக்கிறது என்று தனக்குத் தெரியாது என்று கூறுகிறார்”.

“பிரதமர் அன்வார் இப்ராஹிம் மற்றும் துணைப் பிரதமர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி ஆகியோர் பிரச்சினையைத் தீர்க்கத் தலையிட வேண்டும் மற்றும் நிலைமை கையை மீறுவதற்கு முன்பு கிராம மக்கள், மாநிலம் மற்றும் இயற்கை அன்னையைக் காப்பாற்ற வேண்டும்.”

இப்பகுதியில் REE திருடப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து முடிவுக்கு வர வேண்டாம் என்று சனுசி சமீபத்தில் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

இந்த விவகாரத்தில் மாநில அரசைத் தொடர்புபடுத்துவது நியாயமற்றது என்றும், கடந்த வாரம் வன காப்பகத்தில் கைது செய்யப்பட்ட 52 சந்தேக நபர்களை இது போன்ற நடவடிக்கைகளுடன் தொடர்புபடுத்த எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர் கூறினார்.

இன்றைய ஆர்ப்பாட்டத்தை Pertubuhan Alam Sekitar Sejahtera (Grass) Kedah, Sahabat Alam Malaysia (SAM), and Pertubuhan Pelindung Khazanah Alam Malaysia (PEKA). ஆகியவை கூட்டாக ஏற்பாடு செய்தன.

சனுசிக்கு எப்படித் தெரியாம இருக்கும்?”

கிராஸ் ஆலோசகர் முகமட் சோப்ரி ரோம்லி(Mohd Sobri Romlee), ஜனவரி 2020 இல், சனுசி ஒரு வெளிநாட்டு நிறுவனத்திற்கு மாநிலத்திலிருந்து REEயை எடுப்பதற்கான உரிமத்தை அறிவித்ததாகவும், கடந்த ஆண்டு செப்டம்பரில், சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காகச் சுரங்க தளத்திற்கு அருகே ஒரு நபர் கைது செய்யப்பட்டதாகவும் கூறினார்.

“சீனப் பிரஜையான அந்த நபருக்கு ரிம630,000 அபராதம் விதிக்கப்பட்டது, மேலும் ஒரு நபர் எவ்வாறு இவ்வளவு பெரிய தொகையைச் செலுத்த முடிந்தது என்பதை அரசு விசாரித்திருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

புக்கிட் எங்காங்கில் உள்ள REE நாட்டின் பொக்கிஷம் என்றும் வெளிநாட்டினருக்கு அணுகல் அனுமதிக்கப்படக் கூடாது என்றும் சோப்ரி கூறினார்.

“கடந்த மாதம், மாநிலத்தில் ஆய்வுப் பணிகளுக்காக Jangka Bakat Mineral Sdn Bhd மற்றும் Xiamen Tungsten Co Ltd  இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகச் சனுசி மீண்டும் அறிவித்தார், மேலும் மாநிலத்தில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள்குறித்து தீவிரமாக இல்லாதபோது அவர் REEயில் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார்,” என்று சோப்ரி குற்றம் சாட்டினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் ஜெனேரி சட்டமன்ற உறுப்பினர் மஹத்ஜிர் அப்துல் ஹமீது, இந்த விவகாரத்தைக் கையாண்ட விதம்குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.

எம்.பி.யாகவும் ஜெனேரியின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கும் சனுசி, புக்கிட் எங்காங்கில் சட்டவிரோத சுரங்கம்பற்றித் தனக்குத் தெரியாது என்று எப்படிச் சொல்ல முடியும்?

“2014 பொதுத் தேர்தலில் இந்த விவகாரத்தைப் பிரச்சாரத் தீவனமாகப் பயன்படுத்திய தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இப்போது இதுகுறித்து அமைதியாக இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.”