தாய்மார்கள் வேலைக்குத் திரும்புவதை ஊக்குவிக்கச் Socso சட்டங்கள் திருத்தப்படும்

நீண்ட மகப்பேறு அல்லது பெற்றோர், விடுப்புக்குப் பிறகு பெண்கள் மீண்டும் வேலைக்குச் செல்வதை ஊக்குவிக்கும் வகையில் சமூக பாதுகாப்பு அமைப்பு (Socso) சட்டங்களை அரசாங்கம் திருத்தும்.

தொழிலாளர்களின் காப்புறுதி செய்யப்பட்ட சம்பள மதிப்பில் 80% சமமான மானியங்களை வழங்க அனுமதிப்பது இதில் அடங்கும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.

130,000 க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த மானியத்தால் பயனடைவார்கள் என்று அவர் மதிப்பிட்டார், இது ஆண்டுக்கு 290 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டை உள்ளடக்கியது.

கூடுதலாக, பணியிடத்தில் குழந்தை பராமரிப்பு மையங்கள் மற்றும் நர்சரிகளைத் தயாரிப்பதில் முதலாளிகள் அதிக பங்கு வகிக்க வேண்டும் என்றும் அன்வார் அழைப்பு விடுத்தார்.

“இப்போதெல்லாம், குழந்தை பராமரிப்பு மையங்கள் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன. தாய்மார்கள் பணிபுரியும்போது பெரிய மற்றும் பணக்கார நிறுவனங்களும் குழந்தைகளுக்குப் பொருத்தமான பராமரிப்பு மையங்களை வழங்குவதை நாம் உறுதி செய்ய வேண்டும், “என்று அவர் இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் 2023 ஐ தாக்கல் செய்தபோது கூறினார்.

அரசு ஊழியர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரிம180 குழந்தை பராமரிப்பு மைய மானியத்தையும் அரசாங்கம் வழங்கும் என்றும், மாதாந்திர குடும்ப வருமான தகுதி வரம்பை ரிம5,000 லிருந்து ரிம7,000 ஆக உயர்த்தும் என்றும் அன்வார் கூறினார்.

ஆரம்பகால குழந்தை பருவ கல்விக்கான அணுகலை விரிவுபடுத்துவதற்காக, 13 புதிய திட்டங்கள் உட்பட 80 நர்சரிகள் மற்றும் KEMAS மழலையர் பள்ளிகளின் கட்டுமானத்தை அரசாங்கம் தொடரும் என்று அவர் கூறினார்

2023 வரவுசெலவுத் திட்டம் ரிம388.1 பில்லியனின் மதிப்புடையது – இதில் செயல்பாட்டு செலவினங்களுக்கு ரிம289.1 பில்லியன், தற்செயல் சேமிப்பில் ரிம2 பில்லியன் உட்பட அபிவிருத்தி செலவினங்களுக்கு ரிம99 பில்லியன் ஆகியவை அடங்கும்.