ஜொகூரில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை, வெள்ள நிலைமை மேலும் மோசடைமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது

பத்து பாகாட்  பொதுப்பணித் துறையின் முகநூல் பதிவின்படி, கம்போங் ங்காமார்டோவுக்கு அருகிலுள்ள ஜாலான் ஜொகூர் பாரு-செரெம்பன் டிரங்க் சாலை மற்றும் ஜாலான் பலோவின் பகுதிகள், மடோஸ் மற்றும் கங்கர் தெப்ராவ் ஆகிய சாலைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன.

பாரிட்  சுலோங் சுகாதார கிளினிக்கிற்கு அருகிலுள்ள ஜலான் யோங் பெங்-முவார் மற்றும் ஜலான் பாரிட்  வாரிஜோவின் முழு பகுதியும் மூடப்பட்டுள்ளது. சாலைகள் 0.6 மீ முதல் 1.2 மீ வரை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி, மாநிலத்தில் 238 வெளியேற்ற மையங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,322 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மாலை செகாமட்டின் பத்து அன்னாமில்  ஒரு வயதான பெண் ஒரு பள்ளத்தில் சிக்கி இறந்ததால், இறப்பு எண்ணிக்க்கை அந்த மாநிலம் நான்காக உயர்ந்துள்ளது.

ஜொகூர் காவல்துறைத் தலைவர் கமருல் ஜமான் மாமத், பாதிக்கப்பட்ட 68 வயதான பெண், கெமாஸ் பாருவில்  உள்ள  வெள்ள நிவாரண மையத்தில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவரது பக்கத்து வீட்டுக்காரர் அவர் உடலை கண்டுபிடித்தார்.

தனியாக வசித்து வந்த பாதிக்கப்பட்ட பெண், வெள்ளம் சூழ்ந்த வீட்டிற்கு அருகில் காணப்பட்டதாக அவர் கூறினார். இன்றுவரை, குளுவாங்கில் ஒரு இறப்பும் மற்றும் செகாமட்டில் மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன.

இதற்கிடையில், ஜொகூர் மற்றும் பஹாங்கில் நாளை வரை தொடர்ந்து கனமழை பெய்யும் என மெட்மலேசியா எச்சரித்துள்ளது.

-fmt