செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேலை வாய்ப்புகளைக் குறைக்காது – முஸ்தபா

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்ப வேலை வாய்ப்புகளைக் குறைக்காது, காரணம், இது மனித தொழிலாளர்களை முற்றிலுமாக மாற்ற முடியாது என்று துணை மனிதவள அமைச்சர் முஸ்தபா சக்மூத்(Mustapha Sakmud said)கூறினார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நிர்வகிக்கவும் இயக்கவும் திறமையான பணியாளர்களை உருவாக்கும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்று அவர் கூறினார்.

வேலைவாய்ப்புகளில் அதன் தாக்கத்தைக் குறைக்கும் அதே வேளையில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளை அறிய விரும்பிய செனட்டர் ராபர்ட் லாவ் ஹுய் யூவின்(Lau Hui Yew) நாடாளுமன்ற   கேள்விக்குப் பதிலளித்த முஸ்தபா (மேலே) இதைக் கூறினார்.

நாட்டின் திறமையாளர்களுக்கு பயிற்சியளிப்பதில் அனைத்து பயிற்சி வழங்குநர்களுக்கும், குறிப்பாகத் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET) நிறுவனங்களுக்கு ஒரு குறிப்பை வழங்குவதற்காகத் திறன் மேம்பாட்டுத் துறை (Skills Development Department) டிஜிட்டல் துறை தொடர்பான 182 தேசிய வேலை திறன் தரங்களையும் உருவாக்கியுள்ளது என்று அவர் கூறினார்.

நிரலாக்கம், ஒலிபரப்பு, வெளியீடு மற்றும் தொலைத்தொடர்பு ஆகியவை இதில் அடங்கும். மனிதவளத் துறை (Manpower Department) மூலம் அமைச்சகம் technical and vocational education and training(TVET) கல்வியை மேம்படுத்தவும் செயல்பட்டு வருகிறது, இது டிஜிட்டல் துறையில் திறமையான தொழிலாளர்களைத் தயாரிப்பதற்கும், கோலா லங்காட் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் சைபர் பாதுகாப்பு ஆய்வக உள்கட்டமைப்பை பராமரிப்பதற்கும் பங்களிக்கிறது.

“சைபர் பாதுகாப்புத் துறையில் MD நிறுவனங்களில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி திட்டங்கள் மற்றும் தொழில்முறை சான்றிதழ்களும் உள்ளன,” என்று அவர் கூறினார்.

டிஜிட்டல் துறையில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்க, SDD ஒவ்வொரு ஆண்டும் 1,300 இளைஞர்களின் பங்கேற்பை உள்ளடக்கிய சர்வதேச மற்றும் இளைஞர் அளவிலான திறன் போட்டிகளை ஏற்பாடு செய்கிறது என்று முஸ்தபா கூறினார்.