வீடு, அலுவலகத்தில் ரெய்டு இல்லை: சிவக்குமார் மறுப்பு

மனிதவள அமைச்சர் வி.சிவக்குமார் தனது வீடு மற்றும் அலுவலகத்தில் எம்ஏசிசி சோதனை நடத்தியதாக வெளியான செய்தியை மறுத்துள்ளார்.

இன்று காலைப் புத்ராஜெயாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியின்போது இந்த விவகாரம்குறித்து கேட்கப்பட்டபோது அவர் “இல்லை” என்று பதிலளித்தார்.

நேற்று, எம்ஏசிசி புலம்பெயர்ந்த தொழிலாளர் ஒப்புதல்கள் குறித்த விசாரணை தொடர்பாக அமைச்சரிடமிருந்து ஒரு அறிக்கையைப் பதிவு செய்தது.

இந்த வழக்கு தொடர்பாக ஆணையத்தால் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவரது தனிச் செயலாளர் மற்றும் சிறப்பு செயல்பாட்டு அதிகாரி உள்ளிட்ட மூன்று மூத்த உதவியாளர்களைச் சிவக்குமார் இடைநீக்கம் செய்துள்ளதாக மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.