அமைச்சகம் சரியாகச் செயல்பட ஐந்து அதிகாரிகளைப் பணி நீக்கம் செய்தது – சிவக்குமார்

ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணைக்கு மத்தியில் தனது 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மனிதவளத்துறை அமைச்சர் வி சிவக்குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.

அமைச்சு தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுவதை உறுதி செய்வதற்காகவே இவ்வாறு செய்ததாக அவர் கூறினார்.

“அதிகாரிகள் பணிநீக்கம், இந்த அமைச்சகம் சுமூகமான மற்றும் சரியான முறையில் செயல்படுவதை உறுதி செய்வதற்காக  நடந்தது,” என்று அவர் இன்று காலைப் பாங்கியில் ஒரு நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.

எனினும் இதுகுறித்து மேலும் வினவியபோது சிவக்குமார் விரிவாக எதுவும் தெரிவிக்கவில்லை.

அதிகாரியின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிட்டது யார் என்ற கேள்விகளுக்கும் அவர் பதிலளிக்கவில்லை.

அப்போது ஊழியர்கள் பணி நீக்கம் தொடர்பான விவகாரம், அதிகாரிகள்மீது இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமலோ அல்லது நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில், ஏன் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள் என்பது உள்ளிட்ட வேறு எந்தக் கேள்விகளுக்கும் அமைச்சர் பதிலளிக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.

கடந்த வாரம், மலேசியாகினி செய்தி வெளியிட்டது, ஐந்து மனிதவள அமைச்சக அதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும் ஒருவர் பொதுப்பணித்துறைக்கு மாற்றப்பட்டதாகப் பிரதமர் துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

“எம்ஏசிசி விசாரணையின் காரணமாக அவர்களின் சில ஒப்பந்தங்கள் நிறுத்தப்பட்டன, மற்றவை மோசமான செயல்திறன் காரணமாக இருந்தன,” என்று பிரதமர் துறையின் வட்டாரம் தெரிவித்துள்ளது.

ஆறு அதிகாரிகளும் சிவக்குமாரால் நியமிக்கப்பட்டனர்.

கடந்த மாதம், MACC புத்ராஜெயாவில் உள்ள மனிதவள அமைச்சகத்தை சோதனை செய்தது மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செயல்பாட்டில் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமைச்சரின் மூத்த அதிகாரியைக் கைது செய்தது.

அதைத் தொடர்ந்து, எம்ஏசிசி சிவகுமாரின் தனிச் செயலாளரை நான்கு நாட்கள் ரிமாண்ட் செய்தது, அதே நேரத்தில் அமைச்சரே விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

அதன் எதிரொலியாக, லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தால் தடுத்து வைக்கப்பட்டிருந்த தனிச் செயலாளர் மற்றும் சிறப்புப் பணி அதிகாரி உட்பட அவரது மூத்த உதவியாளர்கள் மூவரை சிவக்குமார் இடைநீக்கம் செய்தார்.

மூவரில், ஒரு அதிகாரி விடுவிக்கப்பட்ட பிறகும் இடைநீக்கத்தில் இருந்தார், மற்ற இருவரும் MACC விசாரணை முடிவடையும் வரை பணியிலிருந்து விடுப்பு எடுத்துள்ளனர்.