அமைதியும் அரசியல் நிலைத்தன்மையும் மலேசியாவில் முதலீடு செய்ய நிறுவனங்களை ஈர்க்கின்றன – பிரதமர்

நாட்டில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதில் பாதுகாப்புப் படையினரின் கடமைகள் முக்கியமாகு. அவை மலேசியாவில் முதலீடு செய்வதற்கான வெளிநாட்டு நிறுவனங்களின் ஆர்வத்தை அதிகரிப்பதற்கு குறிப்பிடத்தக்கப் பங்களித்துள்ளன என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.

நாட்டின் நிலம் மற்றும் கடல் எல்லைகளைப் பாதுகாக்க அயராது பாடுபடும் காவல்துறை மற்றும் ஆயுதப்படைகள் உள்ளிட்ட இந்தப் பாதுகாப்புப் படையினரின் பங்களிப்பைச் சாதாரணமாகப் பார்க்கக் கூடாது என்று அவர் கூறினார்.

நாடு பாதுகாப்பாக இல்லாவிட்டால், முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. எடுத்துக்காட்டாக, சூடான் மற்றும் பாகிஸ்தானில், அவர்கள் எந்தப் புதிய முதலீடுகளையும் பெறுவதில்லை (நெருக்கடி காரணமாக), ஆனால் மலேசியாவில், நாங்கள் புதிய முதலீடுகளைப் பெறுகிறோம், ஏனெனில் அமைதியை உறுதி செய்வதற்கும் பொது ஒழுங்கைப் பராமரிப்பதற்கும் போலீசார் எப்போதும் இருக்கிறார்கள்.”

இங்குள்ள தாங்கா பத்து நாடாளுமன்றத் தொகுதியில் இன்று சமூகத்துடன் ராயல் மலேசியா போலீஸ் (PDRM) ஐடில்பிட்ரி நிகழ்வில் அவர் இதைக் கூறினார்.

மலாக்கா முதல்வர் அப் ரவூப் யூசோ, காவல்துறை துணைத் தலைவர் ரசாருதீன் ஹுசைன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தேசிய அமைதி மற்றும் அரசியல் நிலைத்தன்மை  கீலி, அமேசான்(Geely, Amazon) மற்றும் ரோங்ஷெங் பெட்ரோகெமிக்கல் கோ லிமிடெட்(Rongsheng Petrochemical Co Ltd) போன்ற பெரிய நிறுவனங்களை மலேசியாவில் முதலீடு செய்ய ஈர்த்துள்ளது என்று அன்வார் கூறினார்.

எந்தவொரு தலைவர்களும் தங்களுக்காக மோசடி செய்யாமல் அல்லது செல்வத்தைக் குவிக்காமல், அதன் அரசியல் நிலைத்தன்மை பாதுகாக்கப்பட்டு, வெளிப்படைத்தன்மை தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டால் மலேசியா ஒரு புதிய பொருளாதார சக்தியாக வளர முடியும் என்ற தனது அறிக்கையைப் பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.

“2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், சீனா, இந்தோனேசியா மற்றும் வியட்நாமை மிஞ்சி, நமது பொருளாதார வளர்ச்சி ஆசியாவிலேயே மிகச் சிறந்தது. ஆசியாவில் முதலீடு (மலேசியாவில்) மிக அதிகமாக உள்ளது,” என்று அவர் கூறினார்.

எனவே, பழிவாங்குவதாகக் குற்றம் சாட்டும் கட்சிகள் இருந்தாலும், நாட்டை ஊழலிலிருந்து தூய்மைப்படுத்துவதை உறுதி செய்வதாக இப்போது உறுதியளித்ததாக அன்வார் கூறினார்.

“நான் வெறுப்பு கொள்ளவில்லை, ஊழலிலிருந்து நாட்டைச் சுத்தப்படுத்த விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.