பட்டதாரி ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் – முகமட் காலிட் நோர்டின்

நாட்டில் பட்டதாரி ஆசிரியர்களின் பற்றாக்குறை பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக உயர்கல்வி அமைச்சு கல்வி அமைச்சுடன் நெருக்கமாகப் பணியாற்றும்.

“இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான எங்கள் முயற்சியில் கல்வி அமைச்சால் மட்டுமே வழங்கக்கூடிய (தேவையான ஆசிரியர்களின்) கணிப்புகளை நாங்கள் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்”.

“பல மாணவர்கள் கற்பித்தல் படிப்புகளை எடுத்துக்கொள்வதால், அரசுப் பள்ளிகளில் மட்டுமல்லாமல் தனியார் பள்ளிகளிலும், வெளிநாடுகளிலும் பணியாற்ற ஆசிரியர்கள் தேவை என்பதை நாங்கள் பார்க்க வேண்டும்,” என்று உயர் கல்வி அமைச்சர் முகமட் காலிட் நோர்டின் இன்று செகோலா கெபாங்சான் செடிலி பெசாரில் நடைபெற்ற பல்கலைக்கழக மலேசியா தெரெங்கானு செமரக் கோமுனிட்டி கோட்டா டிங்கி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

பட்டதாரி ஆசிரியர்களின் பற்றாக்குறை குறித்து தேசிய ஆசிரியத் தொழில் சங்கத்தின் தலைவர் அமினுடின் அவாங் வெளியிட்ட அறிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு கூறினார்.

தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சி (technical and vocational education and training) கல்வி மையங்களுக்கு ஆசிரியர்களை உருவாக்குவதில் கூடுதல் கவனம் செலுத்துமாறு பல்கலைக்கழக பெண்டிகான் சுல்தான் இட்ரிஸிடம் கேட்டுக் கொண்டதாகவும் கோத்தா திங்கி எம்.பி கூறினார்.