பினாங்கு கார் கடத்தலில் சந்தேக நபர்கள் கைது

புதன்கிழமையன்று Kepala Batas அருகே உள்ள ஜாலான் பாகன் லாலாங்கில் கார் திருடியது தொடர்பாக மூன்று பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர், இது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

செபெராங் பெராய் உதாரா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் அஸ்ரி ஷஃபி  27 முதல் 49 வயதுடைய மூவரும் நேற்று பேராக்கின் செபராங் ஜெயா, பட்டர்வொர்த் மற்றும் குவாலா கங்சார் ஆகிய இடங்களில் தனித்தனியாகக் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.

காலை 7.45 சம்பவத்தில், பெரோடுவா ஆக்சியாவை ஓட்டிச் சென்ற பாதிக்கப்பட்டவர், சமிக்ஞை விளக்கில் நிறுத்திய போது, மூன்று பேர் திடீரென அவரை வாகனத்திலிருந்து வெளியே இழுத்து போட்டு விட்டு வாகனத்தை ஓட்டிச் சென்றனர்,

“பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் 2020 ஆம் ஆண்டு ஒரு நபரிடம் கடனாகப் பெற்ற ரிம 100,000 பணத்தைத் திருப்பிச் செலுத்தத் தவறியதால் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது என்று முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அந்தப் பெண் எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தில், கடனைச் செலுத்தத் தவறினால், பெரோடுவா ஆக்ஸியா காரைச் சரணடைய ஒப்புக்கொண்டதாக அஸ்ரி கூறினார்.

மேலும் விசாரணையில், கடனளித்தவர் ஆக்சியாவை எடுத்துச் செல்ல ஆட்களை நியமித்துள்ளார் என்று அவர் மேலும் கூறினார்.

கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, போலிசார் காரை மீட்டதாகவும், மூன்று சந்தேக நபர்களும் பிடிபட்டபோது போதைப்பொருள்களை பயன்படுதியிருந்தாகவும் அவர் கூறினார்.

இந்த வழக்கு Penal Code 395 பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.