அம்னோவின் ‘தோல்விக்கு’ அஹ்மட் மஸ்லான் மீது தாஜுடின் குற்றம் சாட்டுகிறார்

15 வது பொதுத் தேர்தலில் கட்சியின் தோல்விக்கு அஹ்மட் மஸ்லான்தான் காரணம் என்று முன்னாள் அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் தாஜுடின் அப்துல் ரஹ்மான் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு அம்னோவிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பாசிர் சலாக் எம்.பி இன்று கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் (WTCKL) 2023 அம்னோ பொதுச் சபைக்குத் திடீர் வருகை தந்தார்.

அவரைப் பொறுத்தவரை, முன்னாள் அம்னோ பொதுச் செயலாளர் என்ற முறையில், கட்சித் தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடிக்கு சரியான ஆலோசனையை வழங்க அஹ்மத் தவறிவிட்டார்.

“அவர் (அஹ்மட்) தன்னைச் சுற்றியுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரின் பேச்சை மட்டுமே கேட்டார்”.

“அவர் அடிமட்ட மக்களின் பேச்சைக் கேட்கத் தவறிவிட்டார்,” என்று தாஜுடின் செய்தியாளர்களிடம் கூறினார்.