கடை ஊழியரை தாக்கிய 2 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்

காஜாங் போலீசார் போதையில் இருந்த இரு கொள்ளையர்களை கைது செய்துள்ளனர்.

இருவரும் செமஞ்சியில் உள்ள 7-11  கடையில் கொள்ளையடித்து, ஒரு ஊழியரை தாக்கியதாக நம்பப்படுகிறது.

இந்தக் கொள்ளைச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, 31 மற்றும் 32 வயதுடைய சந்தேக நபர்களை சிலாங்கூரில் உள்ள செரெம்பன் மற்றும் செபாங் ஆகிய இடங்களில் போலீஸார் கைது செய்தனர்.

18 வயதான கடை ஊழியர், கொள்ளை நடந்த இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, நேற்று காலை 7.30 மணிக்கு புகார் அளித்தார், என்று கஜாங் காவல்துறைத் தலைவர் ஜெய்த் ஹாசன்.

சந்தேக நபர்கள் பானங்கள் வாங்குவதற்காக கடைக்கு வந்ததாக ஜெய்த் கூறினார். அவர்களில் ஒருவர் மூன்று குடைகளை எடுத்துக்கொண்டு பணம் கொடுக்காமல் கடையை விட்டு வெளியேறினார்.

கடை ஊழியர் அவரை வெளியே அழைத்தார், இது சந்தேகத்திற்குரிய நபர்களுடன் வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது, மற்றும் அந்த ஊழியரை முகத்தில் குதி காயப்படுத்தினர்.

பாதிக்கப்பட்டவர் அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

சந்தேக நபர்களுக்கு முந்தைய குற்றப்ப்பின்னணி இருப்பதாக ஜெய்த் கூறினார்.

 

 

-fmt