பக்காத்தான் ஹராப்பானுடன் இணைந்து செயல்பட மூடா விரும்பியது ஆனால் புறக்கணிக்கப்பட்டது – சையத் சாதிக்

வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களில் பக்காத்தான் ஹராப்பானுடன் இணைந்து செயல்பட மூடா விரும்பியது ஆனால் புறக்கணிக்கப்பட்டது என்று கட்சியின் தலைவர் சையத் சாதிக் சையது அப்துல் ரஹ்மான் கூறினார்.

வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களில் தன்னிச்சையாகச் போட்டியிட முடிவெடுப்பதில் மூடா “அதிக அவசரமாக” இருப்பதாக டிஏபி பிரமுகர் லிம் கிட் சியாங்கின் கூற்றுக்கு முவார் எம்பி இவ்வாறாக பதிலளித்தார்.

பிரதமர் அன்வார் இப்ராகிமுடன் ஒத்துழைக்க மூடா விரும்பவில்லை என்ற லிம்மின் கூற்றையும் அவர் ஆதாரமற்றது என்று மறுத்தார்.

பக்காத்தான் ஹராப்பான் தலைவரான அன்வாருடன் ஒரு “எளிய சந்திப்பு” கோரி கட்சி மூன்று கடிதங்களை சமர்ப்பித்துள்ளதாக சையத் சாதிக் கூறினார்.

“இருப்பினும், நாங்கள் கைவிடப்பட்டோம் என்பது மட்டுமல்லாமல், பக்காத்தான் ஹராப்பான் இன் செயலாளர்  சைபுதீன் நசுஷன் இஸ்மாயில், கடிதங்களைப் படிக்க நேரமில்லை என்று பதிலளித்தபோது நாங்கள் கேலி செய்யப்பட்டதக்க உணர்ந்தோம் என்று தெரிவித்துள்ளார்.

“பிரதமரின் அலுவலகம் முன்னதாக ஒரு தேதிக்கு ஒப்புக்கொண்ட போதிலும், கடைசி நிமிடத்தில் அந்த சந்திப்பு மீண்டும் ரத்து செய்யப்பட்டது,” என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

அன்வார் மற்றும் அவரது அதிகாரிகளை பல்வேறு வழிகளில் தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும், ஆனால் எந்த பதிலும் வரவில்லை என்றும் சையத் சாதிக் கூறினார்.

 

-fmt