தேர்தல் ஆணையம்: ஆகஸ்ட் 12 அன்று ஆறு மாநில தேர்தல் நடைபெறும்

சிலாங்கூர், கெடா, பினாங்கு, கிளந்தான், திரங்கானு மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல்கள் ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் கானி சலே இன்று அறிவித்தார்.

இன்று காலைச் சிறப்புக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கியபின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய கனி (மேலே) 14 நாட்கள் பிரச்சாரக் காலத்துடன் ஜூலை 29 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் நாள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

முதற்கட்ட வாக்குப்பதிவு ஆகஸ்ட் 8-ம் தேதி நடைபெறும்.