சிலாங்கூர் சுல்தானை அவமதித்தாக கெடா மந்திரி பெசார் மீது அரச  கவுன்சில் உறுப்பினர் போலிஸ் புகார்

சிலாங்கூர் ராயல் கவுன்சில் உறுப்பினர் ஒருவர் சுல்தான் ஷராபுதீன் இத்ரிஸ் ஷாவை அவமதித்ததாகக் கெடா மந்திரி பெசார் முகமது சனுசி முகமட் நோர் மீது புகார் அளித்துள்ளார்.

சிலாங்கூர் இஸ்லாமிய கவுன்சிலின் முன்னாள் தலைவர் முகமட் அட்ஜிப் முகமட் இசா, ஷா ஆலம் செக்சன்  6 காவல்நிலையத்தில் செய்த தனது புகாரில், சனுசியின்  கருத்துக்கள் சிலாங்கூரில் அமைதியின்மையைத் தூண்டும் என்று கூறியுள்ளார்.

“கெடா மந்திரி பெசாரின் நடவடிக்கை அரச நிறுவனத்தின் பங்கு மற்றும் செயல்பாடுகளை குறைத்து மதிப்பிட்டுள்ளது மற்றும் அவமதிப்பாகவும்  எடுத்துக்கொள்ளலாம்.”

“அவர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்று அட்ஜிப் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பெரிக்காத்தான் நேஷனல் செராமாவின் போது, சனுசி, சுல்தான் ஷராபுதீனின் செய்த சிலாங்கூர் மந்திரி பெசார் தேர்வை, சனுசி அவமதித்ததாகக் கூறப்படுகிறது.

சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்ட இந்த உரையின் வீடியோவில், அந்த பாஸ் தேர்தல் இயக்குனர் கெடா சுல்தானையும் அவரது சிலாங்கூர் கூட்டாளரையும் ஒப்பிடுவதைக் காணலாம், அவர் “தரமில்லாத” மந்திரி  பெசாரைத் தேர்ந்தெடுத்ததாகக் குற்றம் சாட்டினார்.

அட்ஜிப்பைத் தவிர, சனுசிக்கு எதிராக மற்றொரு போலீஸ் புகாரையும் ஓராங் கயா டேரா பெட்டாலிங் எம்ரான் கதிர் பதிவு செய்தார்.

புகார் செய்யும் போது, காவல் நிலையத்தில் முன்னாள் ஆடிட்டர் ஜெனரல் ஆம்ப்ரின் புவாங், முன்னாள் பெடரல் நீதிமன்ற நீதிபதி ஜவாவி சாலே மற்றும் முன்னாள் சிலாங்கூர் மாநிலச் செயலர் முகமது குஸ்ரின் முனாவி ஆகியோர் உடன் இருந்தனர்.

இன்று காலை போலீஸ் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் ரஸாருதீன் ஹுசைன், சனுசிக்கு எதிரான விசாரணை தொடர்பாக இன்று காலை பாங்சாரில் உள்ள ஹோட்டலில் வாக்குமூலம் பதிவு செய்வததை உறுதிப்படுத்தினார்.