விக்னேஸ்வரன்: தொகுதி பேச்சுவார்த்தைகளில் மாஇகா ஓரங்கட்டப்பட்டது

MIC  தலைவர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தனது கட்சியும் MCAவும் ஆறு மாநிலத் தேர்தல்களைத் தவிர்ப்பதற்கான ஒரு முக்கிய காரணம், அவர்கள் தொகுதிப் பேச்சுவார்த்தைகளில் ஓரங்கட்டப்பட்டதே என்று வெளிப்படுத்தியுள்ளார்.

ஆளும் கட்சிகள் தங்கள் இடங்களைத் தக்க வைத்துக் கொள்ளப் பயன்படுத்தப்படும் சூத்திரம், BN போட்டியிட சில தொகுதிகளை ஒதுக்கியது என்று அவர் கூறினார்.

“பேச்சுவார்த்தைகளின்போது (எதிர்க்கட்சிகள்வசம் உள்ள இடங்களுக்கு), MCA மற்றும்  MICக்கு இடங்களை வழங்குவது குறித்து ஒருபோதும் விவாதிக்கப்படவில்லை, குறிப்பாகக் கெடா, பினாங்கு மற்றும் சிலாங்கூரில்”.

“தவிர, MCA மற்றும் MICவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அம்னோ அதிக ஆர்வம் காட்டவில்லை”.

“அவர்கள் (அம்னோ) எங்களுக்கு இடங்களைத் தருவதாகக் கூறிய போதிலும், அது பேச்சுவார்த்தைகளில் விவாதிக்கப்படவில்லை. அதன் காரணமாக, மாநிலத் தேர்தல்களில் போட்டியிடுவதில்லை என்று நாங்கள் முடிவு செய்தோம்,” என்று விக்னேஸ்வரன் (மேலே) இன்று கோலாலம்பூரில் உள்ள மஇகா தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

MCAவும் MICயும் ஜூலை 5 அன்று வரவிருக்கும் மாநிலத் தேர்தலை நிறுத்தும் முடிவைத் தனித்தனியாக அறிவித்தன.

MCA துணைத் தலைவர் டி லியான் கெர் இந்த நடவடிக்கை இன பதட்டங்களை “தணிப்பதை” நோக்கமாகக் கொண்டது என்று கூறியிருந்தார்.

GE16 கவலைகள்

இதற்கிடையில், பக்காத்தான் ஹராப்பானும் BNனும் கூட்டாளிகளாக இருந்து, இப்போதுள்ள அதே தொகுதிப் பகிர்வு சூத்திரத்தைப் பயன்படுத்தினால், 16வது பொதுத் தேர்தலில் MIC போட்டியிடும் வாய்ப்புகள் குறித்து  கவலை தெரிவித்தார் விக்னேஸ்வரன்.

“GE16 இன் போது அதே சூத்திரத்தை (பதவி வகிப்பவர்கள் இடங்களைப் பாதுகாக்க) ஒப்புக்கொண்டால், மஇகா தாப்பாவில் மட்டுமே போட்டியிட முடியும்”.

“இத்தகைய பேச்சுவார்த்தைகள் மஇகாவுக்கு பொருத்தமானவை அல்ல. மாநில தேர்தலில் போட்டியிடுவதை விட எங்கள் கட்சியின் எதிர்காலம் முக்கியம்”.

GE 15 இன் போது MIC 10 நாடாளுமன்ற இடங்களில் போட்டியிட்டது, அதில் அது தாப்பாவில்  மட்டுமே வென்றது.

அது போட்டியிட்ட மற்ற ஆறு இடங்களை ஹராப்பான் வென்றது, மற்ற மூன்று இடங்களைப் பெரிக்காத்தான் நேசனல் வென்றது.