பக்கத்து வீட்டு பேத்திக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்குச் சிறை

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தனது பக்கத்து வீட்டுக்காரரின் 5 வயது பேத்தியை உடல் ரீதியாகப் பாலியல் வன்கொடுமை செய்த மூத்த குடிமகனுக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் வஸீர் ஆலம் மைதீன் மீரா, எம்.குணாளன், எஸ்.எம்.கோமதி சுப்பையா ஆகிய மூவரடங்கிய குழுவினால் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஹருன் தஹ்மான் குற்றவாளி என்று அறிவித்த கங்கார் செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பை மீண்டும் கொண்டுவருவதற்கான அரசுத் தரப்பு மேல்முறையீட்டை அவர்கள் அனுமதித்தனர்.

78 வயதான முன்னாள் ரப்பர் வெட்டும் தொழிலாளி ஒரு முறை தடிஅடியைப்  பெறுவார் மற்றும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் இரண்டு ஆண்டுகளுக்குப் போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்படுவார்.

ஹருனின் தண்டனையை இன்று தொடங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.