தொகுதி எல்லையை தேர்தல் ஆணையம்தான் தீர்மாணிக்கும், முகைதினை சாடினார் குவான் எங்

செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறும் புலாய் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால், நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை 222ல் இருந்து 300 ஆக உயர்த்தும் வகையில், மத்திய அரசமைப்புச் சட்டத்தை ஐக்கிய அரசு திருத்தும் என்று முகைதின் யாசின் கூறியதை டிஏபி தலைவர் லிம் குவான் எங் விமர்சித்துள்ளார்.டிஏபி தலைவர் லிம்

குவான் எங், முன்னாள் பிரதமர் முகைதின் யாசினுக்கு ‘கூட்டாட்சி அரசியலமைப்பில் உள்ள அடிப்படை விஷயங்கள் புரியவில்லை’ என்றார்.

நேற்றிரவு ஜோகூரில் உள்ள கெம்பாஸில் உள்ள பெரிக்காத்தான்  நேஷனல் செராமாவில், கட்சியின் தலைவர் முகைதின், பக்காத்தான் ஹராப்பானின் சுஹைசான் கையாட் புலாய் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றால், டேவான் ராக்யாட்டில் ஐக்கிய அரசாங்கம் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறும் என்று கூறினார். அது அரசியலமைப்பை திருத்த வழி செய்யும் என்றார்,

ஹரியான் மெட்ரோ அறிக்கையில், தேர்தல் ஆணையத்தால் மட்டுமே தேர்தல் எல்லைகளை மீண்டும் வரைய முடியும் என்று கூறிய லிம், இந்த விவகாரம் அரசாங்க எம்.பி.க்கள் மத்தியில் இதுவரையில்  விவாதிக்கப்படவில்லை என்றும் கூறினார்.

“முன்னாள் பிரதம மந்திரி என்ற முறையில், அவர் (முஹைதின்) இதை EC தீர்மானிக்கிறது என்பதை (தேர்தல் எல்லைகளை மறுவடிவமைத்தல்) அறிந்திருக்க வேண்டும்.

“சில சமயங்களில், மத்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள அடிப்படை விஷயங்களைப் புரிந்து கொள்ளாததால், அவர் பிரதமராகும் தகுதி உள்ளவரா என்ற சந்தேகம் எனக்குச் எழுகிறது.

“அவரது நிர்வாகம் ‘கெராஜன் காகால்’ (தோல்வியுற்ற அரசாங்கம்) என்று முத்திரை குத்தப்பட்டதில் ஆச்சரியமில்லை,” என்று அவர் கூறினார்.

கம்பரில் கம்பார் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் கெரஞ்சி மாநிலத் தொகுதிக்கான சேவை மையங்களைத் தொடக்கி வைத்துப் பேசுகையில் லிம் இவ்வாறு கூறினார்.