பயமுறுத்தும் தந்திரம் – பஹாங் எம்பி, PN மாநில அரசாங்கத்தைக் கையகப்படுத்த முடியும் என்ற கூற்றை நிராகரிக்கிறார்

பெலங்கை தொகுதியில் கூட்டணி வெற்றி பெற்றால் மாநில ஆட்சியில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்ற பெரிகத்தான் நேசனலின் கூற்றைப் பகாங் முதல்வர் வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் மறுத்துள்ளார்.

PN தலைவர் முகிடின் யாசின் நேற்று PN பஹாங் அரசாங்கத்தைக் கட்சிவிலகல் மூலம் கைப்பற்ற முடியும் என்று கூறிய பின்னர் இது நிகழ்ந்தது.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய வான் ரோஸ்டி(Wan Rosdy) (மேலே) PN  குழப்பத்தை உருவாக்க முயற்சிப்பதாகவும், வாக்குப்பதிவு நாள் நெருங்கி வருவதால் வாக்காளர்களைப் பயமுறுத்தவும் முயற்சிப்பதாக இந்தக் கூற்றை நிராகரித்தார்.

அம்னோ துணைத் தலைவரின் கூற்றுப்படி, பகாங்கில் உள்ள அனைத்து 15  BN சட்டமன்ற உறுப்பினர்களும் ஊகங்களைத் தொடர்ந்து அவரது தலைமையுடன் உறுதியாக இருப்பதாக உறுதியளிக்கும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

“மக்கள் மத்தியில் அரசாங்க மாற்றம் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அவர்கள்  பரபரப்பான உணர்வை வெளிப்படுத்த விரும்புகின்றனர் என்பதற்கு இது மற்றொரு தெளிவான சான்று ஆகும்.”

அரசியல்வாதிகளாக, கொள்கைகளையும், செயல்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு, உணர்வுகளை வெளிப்படுத்தாமல், நாம் விவாதிக்க வேண்டும். இதை ஒரு தலைவர் சொல்ல வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.

” அவர்கள் கதைகளை உருவாக்குகிறார்கள், மக்கள் இதைக் கேட்கும்போது அவர்கள் பயப்படுவார்கள். இது ஆரோக்கியமற்றது என்று அவர் தெரிவித்தார். இன்று பெலங்கையில் நடைபெற்ற பிரச்சாரத்தின்போது அவர் செய்தியாளர்களிடம் பேசினார்”.

PN இன் புதிய விவரிப்பு BN வாக்குகளில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று மந்திரிபெசார் நம்பினார்.

வெளியூர் வாக்காளர்களை அழைத்துச் செல்கிறது

PN பல மலாய் தன்னார்வ தொண்டு நிறுவனங்களைத் திரட்டி, ஊருக்கு வெளியே உள்ள வாக்காளர்களை மீண்டும் பெலங்கைக்கு அழைத்துச் சென்று, அவர்கள் கூட்டணிக்கு வாக்களிக்க முடியும் என்று வான் ரோஸ்டி கூறினார்.

“நாங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் அணிதிரட்டுகிறோம். மேலும் நாங்கள் மலாய் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை மட்டுமல்ல, மலாய்க்காரர்கள் அல்லாதவர்களையும் ஈடுபடுத்தினோம். அவர்களைப் போலல்லாமல் (PN), மலாய் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை மட்டுமே சார்ந்துள்ளனர்,” என்று அவர் மேலும் கூறினார்.

PN தலைவர் முகிடின் யாசின் மற்றும் PAS துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான்

நேற்று, முகிடின், PN நட்பு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடனான உரையாடல் அமர்வில் தனது உரையில், பெலங்கை இடைத்தேர்தலில் கூட்டணி வெற்றி பெற்ற பிறகு, கட்சி விலகல் மூலம் மாநில அரசைக் கைப்பற்ற முடியும் என்றார்.

பெர்சத்து தலைவரின் கூற்றுப்படி, பெலங்கையில் வெற்றி பெற்றதன் மூலம், மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையை உருவாக்க PNக்கு இன்னும் நான்கு இடங்கள் மட்டுமே தேவைப்படும்.

“ஒருவேளை, யாருக்குத் தெரியும், ஒரு நாள் காலையில் சில அம்னோ பிரதிநிதிகள் திடீரென்று தாங்கள் தவறு செய்துவிட்டதை உணர்ந்து, எங்கள் கூட்டணியில் சேர விரும்புவார்கள்”.

“இது நடந்தால், PAS துணைத் தலைவர் துவான் இப்ராஹிம்(துவான் மேன், அடுத்த பகாங் மந்திரி பெசார் ஆவார்,” என்று முகிடின் கூறினார்.