ICL முறையில் PTPTN கடனைத் திருப்பிச் செலுத்துதல் நடைமுறை – PM

தேசிய உயர்கல்வி நிதிக் கழகத்தின் (PTPTN) கடன்களை வருமான தற்செயல் கடன் (Income Contingent Loan) மூலம் திருப்பிச் செலுத்துவது நடைமுறைக்குரியது மற்றும் கடன் வாங்குபவர்களுக்குச் சுமையாக இருக்காது என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறினார்.

தேசிய உயர் கல்விக் கொள்கையில் தேசிய மறுஆய்வுக் குழு (National Review Committee) முன்மொழியப்பட்ட பல முறைகளில் ICL, உள்நாட்டு வருவாய் வாரியத்தின் மூலம் மாத ஊதிய விலக்குகளை உள்ளடக்கும் என்று அவர் கூறினார்.

PTPTN கடன்களுக்கான திருப்பிச் செலுத்தும் விகிதம் மிகவும் குறைவாக இருப்பதாகவும், PTPTN இன் நீண்ட கால நிலைத்தன்மை குறித்து அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

“மே 2023 வரை, நிலுவையில் உள்ள கடன் தொகை ரிம 66.9 பில்லியன். இந்தத் தொகையைத் திருப்பிச் செலுத்தினால், சுமார் 2.5 மில்லியன் புதிய மாணவர்களுக்கு நிதியளிக்க முடியும்,” என்றார்.

இன்று புத்ராஜெயாவில் உயர்கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய உயர்கல்வி திறந்த நாள் நிறைவு விழாவின்போது அன்வாரின் உரையைத் துணைப் பிரதமர் ஃபதில்லா யூசுப் வாசித்தார்.

உயர்கல்வி அமைச்சர் முகமட் காலிட் நோர்டினும் உடன் இருந்தார்.

துணைப் பிரதமர் ஃபதில்லா யூசோப்

உயர்தர மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியை உருவாக்குவதற்காக, சேவை நிலை ஒப்பந்தம் (SLA) மூலம் அரசுப் பல்கலைக்கழகங்கள் அரசாங்கத்திற்குக் கட்டுப்படும் புதிய நிதியளிப்பு பொறிமுறையை அறிமுகப்படுத்த NRC பரிந்துரைத்ததாக அன்வார் கூறினார்.

ப்ளோ கிராண்ட் மாடல்  மாதிரிக்குப் பதிலாக, செயல்திறன் அடிப்படையிலான நிதிச் சூத்திரத்தின் அடிப்படையில் கல்விச் சேவைகளுக்கு அரசு பொது உயர்கல்வி நிறுவனங்களுக்கு ‘பணம்’ வழங்க வேண்டும் என்று முன்மொழிவு பரிந்துரைக்கிறது என்றார்.

“இந்தச் சூத்திரம் பட்டதாரி வேலைவாய்ப்பு, பட்டதாரி சம்பளம் மற்றும் கல்வியின் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் இருக்க வேண்டும்.வலுவான செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய நிறுவனங்கள் ஒரு மாணவருக்கு அதிக செலவைப் பெறும்,” என்று அவர் கூறினார்.

உயர் கல்விக்கான நிதியுதவி

நிதியமைச்சராக இருக்கும் அன்வார், ஹாங்காங்கில் உள்ளதைப் போன்ற மூன்று ஆண்டு  வரவு-செலவுத் திட்டச் சுழற்சியைச் செயல்படுத்தவும் NRC பரிந்துரைத்துள்ளது என்றார்.

பல்கலைக்கழக மானியக் குழு (UGC) மூலம் இது ஒழுங்குபடுத்தப்படும் என்று அவர் கூறினார், இது நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் முன்மொழிவுகளை பரிசீலிக்கும், திட்டங்களின் அவுட்லைன் மற்றும் நாட்டின் தேவைகளின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை இலக்குகளை நிர்ணயிக்கும், இலக்கு மாணவர் சேர்க்கையின் அடிப்படையில் நிதி வழங்கப்படும்.

NRC., என்டோவ்மென்ட்கள் மற்றும் வகாஃப் நிதிகள்மீது விதிக்கப்பட்ட 50 சதவீத வருடாந்திர செலவுத் தேவையை நீக்கி, பல்கலைக் கழக உதவித்தொகை நிதியை விரிவுபடுத்துவதையும் கவனித்ததாக அவர் கூறினார்.

இதன் மூலம் அறக்கட்டளை மற்றும் வகாஃப் நிதி மேலும் விரிவுபடுத்தப்பட்டு, அதன் மூலம் உயர் கல்வியின் தரத்தை உயர்த்த முடியும் என்றும் அவர் கூறினார்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் Massachusetts Institute of Technology (MIT) போன்ற உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் கல்வி அமைப்பில் மறு முதலீடு செய்ய அனுமதிக்கும் பெரிய அளவிலான நிதியைக் கொண்டிருப்பதாக அன்வார் கூறினார்.

ஒட்டுமொத்தமாக, நாட்டின் உயர்கல்வியை சீர்திருத்துவதற்காக உயர்கல்வி அமைச்சகத்தால் நிறுவப்பட்ட  NRC இன் பரிந்துரைகள் மிகவும் நம்பிக்கைக்குரியவை என்றும், நிதி அமைச்சகத்துடன் மேலும் விவாதிக்கலாம் என்றும் அவர் கூறினார்.