வெற்றிகரமான இருதய ஸ்டென்ட் அறுவை சிகிச்சையிலிருந்து ரஃபிஸி குணமடைந்து வருகிறார் – சைபுதீன் நசுஷன் இஸ்மாயில்

பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி கடந்த வாரம் இருதய ஸ்டென்ட் பொருத்தும் செயல்முறையை மேற்கொண்டார், இப்போது அவர் குணமடைந்து வருவதாக உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுஷன் இஸ்மாயில் தெரிவித்தார்.

அந்த நேரத்தில் பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படாததால், பிகேஆர் துணைத் தலைவராக இருக்கும் ரஃபிசிக்கு நெருக்கமான ஒரு வட்டாரம்மூலம் இந்த விஷயம்குறித்து தனக்குத் தெரிவிக்கப்பட்டதாக பிகேஆர் பொதுச் செயலாளரான சைபுதீன் கூறினார்.

இன்று தேசிய பதிவுத் துறையின் 75வது வைர விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,“ அவர் நலமாக உள்ளார்,  இப்போது ஓய்வெடுத்து வருகிறார்.

அக்டோபர் 21 அன்று, சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா, ரஃபிசிக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், ஆனால் அதன் பிறகு அவர் நன்றாக இருப்பதாகவும், ரஃபிசி மலேசியா பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் (PPUM) சிகிச்சை பெற்றதை உறுதிப்படுத்தினார் என்றும் அறிவித்தார்.