நவம்பர் 30 அன்று முற்போக்கான ஊதியக் கொள்கைபற்றிய வெள்ளை அறிக்கை – ரஃபிசி

2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் முற்போக்கான ஊதியக் கொள்கையை அமல்படுத்துவதற்கான ஒதுக்கீட்டை உள்ளடக்கியுள்ளதாகப் பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி இன்று தெளிவுபடுத்தினார்.

இது தொடர்பான வெள்ளை அறிக்கை அடுத்த மாத இறுதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, பிரதம மந்திரி அன்வார் இப்ராகிம் 2024 பட்ஜெட்டை வெளியிடும்போது முற்போக்கான ஊதியக் கொள்கையைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை, ஆனால் இந்த அமைப்பு எவ்வாறு செயல்படும் என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இன்று நாடாளுமன்றத்தில் பேசிய ரஃபிஸி, தனியார் துறையை உள்ளடக்கிய ஒரு முன்னோடி திட்டத்திற்கான நிதி தனது அமைச்சகத்திற்கான ஒதுக்கீட்டின் கீழ் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.

“முற்போக்கான ஊதியங்களை அமல்படுத்துவது ஒரு துணிச்சலான நடவடிக்கையாகும், இது பொருளாதாரம் மற்றும் பொதுமக்களின் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்கிறது, ஏனெனில் தனியார் துறையில் ஊதியத்தை உயர்த்த அரசாங்கம் நேரடியாகத் தலையிடுவது இதுவே முதல் முறை”.

“எனவே, செயல்படுத்தல் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியது மற்றும் நாடு தழுவிய ஒருங்கிணைந்த முயற்சியாகச் செய்யப்பட வேண்டும் என்பதே முடிவு,” என்று அவர் மேலும் கூறினார்.

கொள்கையின் அடிப்படை அம்சங்கள் மற்றும் வழிமுறைகளை விவரிக்கும் வெள்ளை அறிக்கை நவம்பர் 30 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று ரஃபிஸி கூறினார்.