புலம்பெயர்ந்தோரை கடத்துதல், மிரட்டி பணம் பறித்தல் தொடர்பாக 3 அரசு ஊழியர்கள் கைது

புலம்பெயர்ந்தோரைக் கடத்தி பிணைப்பணம் கோரிய  குற்றச்சாட்டின் பேரில் மூன்று அரச ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஹுசைன் உமர் கான், தலைமறைவாக இருக்கும் மேலும் மூன்று சந்தேக நபர்களை போலீஸார் கண்டுபிடித்து வருகின்றனர் என்று கூறினார்.

பாதிக்கப்பட்டவரின் உறவினரால் பதிவு செய்யப்பட்ட புகாரின் பேரில், ஆறு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாகவும், “காவல்துறை புகாரை பதிவு செய்வதற்கு எதிராக புகார்தாரர் எச்சரிக்கப்பட்டார்,” என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

6 சந்தேக நபர்களும் வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 385 மற்றும் 342 இன் கீழ் முறையே மிரட்டி பணம் பறித்தல் மற்றும் பிணையாக  அடைத்ததற்காக விசாரணைகள் நடத்தப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.

 

-fmt