இராமச்சந்திரன் கருப்பையா மறைவு

தலைநகர் லெபோ அம்பாங்கில் உள்ள ஹொங் கொங் பேங்க்(Hong Kong Bank) எனும் பொருளகத்தில் நீண்டநாள் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இராமச்சந்திரன் கருப்பையா,வயது 76, ( இன்று(12/12/23) அதிகாலை சுமார் 1.15 மணியளவில் இயற்கை எய்தினார்.இவர் ‘மலேசியா இன்று’வில் தொடர்ச்சியாகக்  கட்டுரைகளைப் படைத்துவரும் இராகவன் கருப்பையா அவர்களின் மூத்த சகோதரராவார்.

தமது இளமை காலத்தில் ஒரு சிறந்த பூபந்தாட்டக்காரராகத் திகழ்ந்த இவருக்கு மீனாட்சி எனும் மனைவியும் சாமுண்டீஸ்வரி நாச்சியார் எனும் மகளும் தியாகராஜன் எனும் மருமகனும் 3 பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.

அன்னாரின் நல்லுடல் நாளை புதன்கிழமை 13ஆம் தேதி காஜாங்கில் உள்ள அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு நண்பகல் 2 மணிக்கு செராஸ் மின் சுடலையில் தகனம் செய்யப்படும்.

தொடர்புக்கு: 0193315564(இராகவன்)

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு ‘மலேசியா இன்று’வின் நிர்வாகத்தினர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.