அம்னோ ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் – தொகுதி தலைவர்கள் மிரட்டல்

ஞாயிற்றுக்கிழமை அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடிக்கும் அதன் கட்சிப் பிரிவுத் தலைவர்களுக்கும் இடையே நடந்த சிறப்பு  சந்திப்பில், ஐக்கிய அரசாங்கத்திற்கான ஆதரவை வாபஸ் பெறுமாறு கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்று ஒரு தலைவர் கூறுகிறார்.

பெயர் தெரியாத நிலையில் பேசிய தலைவர், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் SRC இன்டர்நேஷனல் வழக்கில் அவருக்கு முழு மன்னிப்பைப் பெறத் தவறியதை அடுத்து, பல பிரிவுத் தலைவர்கள் இந்த அழைப்பை ஆதரித்ததாகக் கூறினார்.

எவ்வாறாயினும், ஒற்றுமை அரசாங்கத்தில் இருந்து விலகுவது கட்சிக்கு “ஆபத்தாகும்”, கட்சி தற்போது நல்ல நிலையில் இல்லை. ஆட்சியில் இருந்து வெளியேறினால் பலத்தையும் பேரம் பேசும் சக்தியையும் இழக்க நேரிடும், என்று அவர் தெரிவித்தார்.

பிரிவுத் தலைவர்களின் பல குழுக்களும் இந்த விஷயத்தில் தனிப்பட்ட முறையில் ஜாஹிட்டை அணுகியுள்ளனர் .

“நஜிப்பை மீண்டும் கொண்டுவர கட்சிக்கு உதவத் தவறியதால், பிரதமர் அன்வார் இப்ராஹிம் மீது மகிழ்ச்சியடையவில்லை,” என்று அவர் கூறினார்.

முஹைதின் யாசின் ஆட்சியில் இருந்தபோது, கோவிட்-19 தொற்றுநோயைக் கையாண்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ஜூலை 2021 இல், அரசாங்கத்திலிருந்து அம்னோ விலகுவது முதல் தடவையாக இருக்காது.

மற்றொரு பிரிவுத் தலைவர், பெயர் குறிப்பிட விரும்பாதவர், கட்சிக்குள், குறிப்பாக நஜிப்பின் முகாமில் உள்ளவர்களிடையே பதற்றம் நிலவுவதாக தெரிவித்தார்.

“நஜிப்புக்கு முழு மன்னிப்பு கிடைக்கும் என்று அவர்கள் நம்பினார்கள், ஆனால் அது நடக்கவில்லை. அன்வார் எப்படி மன்னிக்கப்பட்டார்களோ அதுபோல நஜிப்பும் மன்னிக்கப்படுவார் என்ற நம்பிக்கையில்,” அவர்களில் பெரும்பாலோர் ஆரம்பத்தில் பக்காத்தான் ஹராப்பானுடன் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டனர், என்று அவர் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை, 191 பிரிவு தலைவர்கள் நஜிப்பிற்கு முழு அரச மன்னிப்பு கோரும் மனுவிற்கு ஒரு மில்லியன் கையெழுத்துக்களை சேகரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

SRC இன்டர்நேஷனல் வழக்கில் நஜிப்பின் தண்டனையை 12 ஆண்டுகளில் இருந்து பாதியாகக் குறைத்து, 210 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை 50 மில்லியன் ரிங்கிட்டாக குறைப்பதற்கான கூட்டாட்சிப் பகுதி மன்னிப்பு வாரியத்தின் முடிவைத் தொடர்ந்து இந்த சந்த்திப்பு நடைபெற்றது. இந்த முடிவு வருத்தம் அளிப்பதாகவும் ஆனால் முடிவை மதிப்பதாகவும் அம்னோ கூறியது.

மேலும், சட்டத்தின்படி நஜிப்பிற்கு தொடர்ந்து நீதி கிடைக்கப் போவதாகவும் கட்சி தெரிவித்துள்ளது.

 

-fmt