தெருப் பந்தயங்களுக்கு எதிரான இரண்டு நாள் சோதனையின் போது, போலீசார் 12 இரு சக்கர வாகனங்களைக் கைப்பற்றினர் மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக 74 சம்மன்களை பிறப்பித்தனர்.
நகரில் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுநர்கள் குழு ஒன்று பொறுப்பற்ற முறையில் பந்தயம் கட்டி சவாரி செய்வதைக் காட்டும் காணொளி பரவியத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கெமாமன் காவல்துறைத் தலைவர் ராசி ரோஸ்லி தெரிவித்தார்.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 1 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இந்த நடவடிக்கையில் 17 அதிகாரிகள் ஈடுபட்டனர்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நடமாட்டம் மற்றும் செயல்பாடுகளில், குறிப்பாக இரு சக்கர வாகனங்கள் சம்பந்தப்பட்டவற்றில், மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று ராசி வலியுறுத்தினார். சட்டவிரோத தெருப் பந்தயம் சட்டத்தை மீறுவது மட்டுமல்லாமல், பிற சாலைப் பயனாளர்களின் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று அவர் கூறினார்.
-fmt