மக்கள் பணத்தில் வாழும் போலிஸ்  மக்களை கொல்வது ஒடுக்குமுறையாகும்

மார்ச் 16 அன்று தெரெங்கானுவில் போலீசாரால் படுகொலை செய்யப்பட்ட சான் வெய் ஹானின் குடும்பத்தினர், மக்களுக்கு அநீதி இழைத்ததாகக் கூறி அதிகாரிகளை கடுமையாக சாடியுள்ளனர்.

வரி செலுத்துவோரின் பணத்திலிருந்து சம்பளம் செலுத்தப்பட்ட போதிலும், வெய் ஹானின் மரணம் குறித்து தெளிவுபடுத்தக் கோரி குடும்பத்தினர் விடுத்த கோரிக்கைகளுக்கு போலீசார் ஒத்துழைக்க மறுத்துவிட்டதாக பாதிக்கப்பட்டவரின் மூத்த சகோதரர் வெய் சுவான் சாடினார்.

தனது சகோதரர் தேடப்படும் நபர் என்றும், அவர் திருடப்பட்ட வாகனத்தை ஓட்டி வந்தவர் என்றும் காவல்துறை கூறியதை எதிர்த்து, இறந்தவரின் தனிப்பட்ட உடைமைகள் எவ்வாறு காணாமல் போனது என்பது குறித்தும் வெய் சுவான் அதிருப்தி தெரிவித்தார்.

“எனது சகோதரர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டபோது அணிந்திருந்த தங்கச் சங்கிலி மற்றும் தங்க மோதிரம் இதுவரை எங்களிடம் ஏன்  திருப்பித் தரப்படவில்லை?” என்று இன்று பெட்டாலிங் ஜெயாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது வெய் சுவான் கேள்வி எழுப்பினார்.

“அவர் இறந்த இடத்திற்குள் நுழையக்கூட எங்களுக்கு அனுமதி இல்லை, இறுதியில் தடயவியல் துறையில் அவரது உடலைப் பார்த்தபோது, ​​அங்கு காவல்துறை அதிகாரிகள் நிறுத்தப்பட்டிருந்தனர்…அப்படி இருக்கையில் நகைகள் எப்படி காணாமல் போயிருக்கும்?” என்று வினவினார். எழுப்பினார்.