ஒற்றுமையில்லா இந்திய இனத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெகுமதி!

PKR-NationalCongress-Anwarமூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற கட்சி ஏன் இரு இந்தியர்களுக்கு இடம் கொடுத்திருக்கக் கூடாது? அதிகார வர்க்கத்தின் இந்த அரசியல் மீது மிகவும் வெறுப்பே முன் வந்து நிற்கிறது.

சிலாங்கூர் அரசின் கண்ணை உறுத்தும் இது போன்ற ஒரே தேசம், ஒன்றே மக்கள் என்னும் பரப்புரைகள் இனி எடுபடுமா? கேள்விகளை அடுக்கும் எதிர் அணியினர்? மற்றவர்கள் மத்தியில் பக்காத்தான் செயல்பாடு அனுபவம் இல்லா தலைமைபோல் தோற்றம் காட்டுகிறதே?

கடந்த ஐந்து ஆண்டுகள் எப்படியோ குறை பேசியவர்களை சமாளித்த இந்தியர்கள் இனி இதற்கு எவ்வாறு பதில் சொல்லி தலை நிமிர்வார்கள். பினாங்கு இதில் எவ்வளவோ முன் உதாரணமாக திகழ்கிறதே!

அன்வார் பற்றி தேர்தல் சமயம் எதிர் அணி இந்தியர்கள் எவ்வளவோ மோசமாக பேசியும். அவற்றை சமாளித்த பக்காத்தான் இந்திய ஆதரவாளர்கள் இனி எவ்வாறு தலை காட்டுவார்கள் ? இதற்கு நல்ல தீர்வு / திருப்பம் காண்பார்களா?

இந்திய சமுதாயம் தொடர்ந்து பின் தள்ளப்பட்டால் கட்டாயம் ஒரு நாள் அவர்கள் முடிவு மாறுபடும். இந்தியர்கள் குதிரைகள் என்று நம்பியவைகள் எல்லாம் இன்று நரிகளாகி விட்டன.

வருவான் ஒரு தலைவன்!
இன நலன்… இன மானம் காப்பான்!
காலம் கட்டாயம் கனியும்!
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் நன்றாக நிலைப்படுத்தப்படும் காலம் கட்டாயம் வரும்!

-நாசா

———————————————————————————————————————————————————————

உங்கள் எண்ணத்தில் தோன்றும் கருத்துகளையும், உள் மனதின் குமுறல்களையும் நீங்கள் ‘மக்கள் கருத்து’ பகுதிக்கு எழுதி அனுப்பலாம்.

எழுதி அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:  [email protected]   / தொலைநகல் : 03-26918272