நோர்வே அமைச்சர்களை GTF பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர்

அண்மையில் உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகள், நோர்வே நாட்டு அமைச்சர்கள் சிலரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். நோர்வே நாட்டின் அபிவிருத்தி மற்றும் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் எரிக் சொல்கைம், அந்நாட்டு எதிர்கட்சித் தலைவர் ஏனா சொல்பேர்க், மற்றும் பாதுகாப்புப் அமைச்சில் உள்ள சில துணை அமைச்சர்கள் சிலரையும்…

“சிறுநீர் கழித்தால் சுட்டே புடுவேன்”: பரபரப்பை ஏற்படுத்திய சுவரொட்டி

தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் அமைந்துள்ள காவல்துறை துணை கண்காணிப்பாளர் பணிமனை மற்றும் அனைத்து மகளிர் காவல் பணிமனைக்கு அருகே பேருந்து நிறுத்தம் உள்ளதால் அங்கு வரும் பயணிகள் காவல் பணிமனை சுவர்களுக்கு முன்பே சிறுநீர் கழிக்கின்றனர். இதைத் தடுக்க காவல்துறையினர் பலமுறை எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டும் தொடர்ந்து சிலர் இங்கு…

பிரதமரின் அறிவிப்பு பயனற்ற மழுப்பல்; ஜெயலலிதா சாடல்

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தில் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு ஆதரவளித்து வாக்களிக்கும் மனப்பாங்கில் இந்தியா உள்ளது என இந்தியப் பிரதமர் செய்துள்ள அறிவிப்பை விமர்சித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியப் பிரதமரின் அறிவிப்பில் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றி…

இலங்கைக்கு எதிராக வாக்களிக்கத் தயார் : இந்தியப் பிரதமர்

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்மொழிந்துள்ள தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கக் தயார் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அமெரிக்க தீர்மானத்தின் இறுதி வடிவம் இன்னமும் இந்தியாவுக்கு கிடைக்கப்பெறவில்லை என்று கூறியுள்ள மன்மோகன் சிங், இலங்கையிலுள்ள…

இந்தியாவுக்கான நிதியுதவியை நிறுத்திக்கொள்ள பிரிட்டன் முடிவு

இந்தியப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில், இதுவரை அளித்து வரும் நிதியுதவியை நிறுத்த, பிரிட்டன் முடிவு செய்துள்ளது. 2015-ம் ஆண்டுக்குப் பின், இந்நிதியுதவி இந்தியாவுக்கு கிடைக்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டனின் அனைத்துலக மேம்பாட்டுத் துறை, பல நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, நிதியுதவி செய்து வருகிறது. பிரிட்டனின் மற்ற துறைகளைப்…

கடாபியின் மருமகனை நாடு கடத்த நெருக்கடி!

ஆப்ரிக்காவின் மாரிடானியா நாட்டில் கைது செய்யப்பட்ட கடாபியின் உளவுத்துறைத் தலைவரை, நாடு கடத்தும் முன்பே அவரிடம் விசாரணை நடத்தி முடிக்க மாரிடானியா அரசு முடிவு செய்துள்ளது. லிபியாவில், கடாபி தலைவராக இருந்த போது, அவரது மருமகனான அப்துல்லா அல் சனுஸ்ஸி, உளவுத் துறைத் தலைவராக இருந்தார். கடாபிக்கு எதிரான…