மீண்டும் அமைச்சரானார் விஜயகலா ! கடும் சீற்றத்தில் பேரினவாதிகள்

விஜயகலா மகேஸ்வரனுக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இன்று கல்வி இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவை ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் விடுதலை புலிகள்…

விஜயகலாவுக்கு முக்கிய பதவி வழங்கி மகிந்தவை அதிர்ச்சியடைய வைத்த ரணில்!

புதிய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்துள்ளனர். இதன்படி விஜயகலா மகேஸ்வரனிற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ரஞ்சன் ரமநாயக்கவுக்கு நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனால் மஹிந்த தரப்பு பெரும்…

யாழில் மீண்டும் களமிறங்கிய விடுதலை புலிகள்! அதிர்ச்சியில் சிங்களவர்கள்

தமிழீழ விடுதலைப் போராட்டமானது 2009 ஆம் ஆண்டிற்குப் பின்னர் மௌனித்துள்ளதே தவிர மரணிக்கவில்லை எனக் குறிப்பிடப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரால் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. எமது ஒற்றுமையைக் குலைத்து இனத்தில் ஆளுமையைச் சிதைக்கும் நடவடிக்கைகள் புலனாய்வாளர்களால் மேற்கொள்ளப்படுவதைத் தாம் கண்காணித்து வருவதாகவும் ஆகையினால் அதிலிருந்து முற்றுமுழுதாக விலகி,…

ரணிலை பாராட்டிய அமெரிக்கா; எதற்காக தெரியுமா?

சிறிலங்காவின் பிரதமராக மீண்டும் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதை பாராட்டியுள்ள அமெரிக்கா, அவருடன் இணைந்து பணியாற்ற விருப்பம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் றொபேர்ட் பல்லாடினோ நேற்றுமுன்தினம் வொசிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய போதே இவ்வாறு கூறியுள்ளார். “கடந்த கடந்த மாதங்களில் நீடித்த அரசியல் நெருக்கடிக்கு, அரசியலமைப்பு நெறிமுறை…

ரணில் தலைமையிலான அமைச்சரவை மீண்டும் பொறுப்பேற்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவை பதவியேற்றது. அந்த வகையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பல அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டன. இதில் முக்கியமாக வடமாகாண அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு ஆகிய துறைகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுள்ளார். அக்டோபர் 26ஆம் தேதி…

ஒரு நாடு இரு பிரதமர் சர்ச்சை முடிந்து ஒரு நாடு…

சபாநாயகர் இன்னும் தன்னை பதவியில் இருந்து நீக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் விசேட உரையொன்றை ஆற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தற்போது இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இருவர் வகித்து வருவதாக கருத வேண்டியுள்ளது…

மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதில் சிக்கல்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் பதவியேற்று 50 நாட்களின் பின்னர் அந்தப் பதவியை ராஜிநாமா செய்த நிலையில், தற்போது அவர் சட்டப்படி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கவே முடியாது என்கிற வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவராக இருந்த…

இரா.சம்பந்தன்: “என்னை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கவில்லை”

இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவர் பதவியில் தற்பொழுது இரண்டு பேர் இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கும் முன்னர் தன்னை எதிர்க் கட்சி தலைவர் பதவியிலிருந்து உத்தியோக பூர்வமாக சபாநாயகர் நீக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற…

வரவேற்கிறார் பிரித்தானிய அமைச்சர் – அவுஸ்ரேலியாவும் ஆதரவு

சிறிலங்காவின் அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதை பிரித்தானியாவும் அவுஸ்ரேலியாவும் வரவேற்றுள்ளன. இதுதொடர்பாக பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்தின், ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான இணை அமைச்சர் மார்க் பீல்ட் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “சிறிலங்காவின் அரசியல் நிலைமைகளுக்கு, அமைதியான முறையில் தீர்வு காணப்பட்டுள்ளதை வரவேற்கிறேன். நெருங்கிய நண்பனாகவும், பங்காளராகவும் சிறிலங்காவுடன், பிரித்தானியா …

மஹிந்தவின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு த.தே.கூட்டமைப்பு எதிர்ப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்‌ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்தமையை சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன்று நாடாளுமன்றத்தில் தனது எதிர்ப்பை தெரிவித்தார். ஒரு கட்சி உறுப்பினராக நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் மற்றுமொரு கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டவுடன் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி…

இலங்கை எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், சமீபத்திய அரசியல் நிகழ்வுகளில் பிரதமராக நியமிக்கப்பட்டு, பதவி விலக நேர்ந்தவருமான மஹிந்த ராஜபக்ஷ தற்போது நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இலங்கை அரசியலில் அதிரடித் திருப்பமாக, கடந்த அக்டோபர் 26-ம் தேதி பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க-வை அந்தப் பதவியில் இருந்து அகற்றிவிட்டு தமது…

சிறிலங்கா அரசியல் மாற்றம் – அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பு

சிறிலங்காவில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி அமைதியாகவும், அரசியலமைப்பு ரீதியாகவும், தீர்த்து வைக்கப்பட்டிருப்பதை அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் வரவேற்றுள்ளன. சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் இன்று வெளியிட்டுள்ள கீச்சகப் பதிவு ஒன்றில், “சிறிலங்காவின் ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டப, இந்த வார அரசியல் முன்னேற்றங்களை அமெரிக்கா வரவேற்கிறது.…

ரணில் தொடர்பில் டெலோவின் சூளுரை; இந்த வருடத்தின் மிகப்பெரும் நகைச்சுவை…

ஸ்ரீலங்காவின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவை வழங்கிவிட்டு கை கட்டி நிற்கும் செயற்பாட்டை செய்யமாட்டோம் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான டெலோ சூளுரைத்துள்ளது. தெனன்னிலங்கை அரசியல் குழப்பங்களை பயன்படுத்தி தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதே தமது நோக்கம் என்றும், அதற்காகவே ரணிலுக்கு…

இலங்கை போர் குற்றங்கள்: வெளிநாட்டு நீதித்துறையின் தலையீடு அவசியம் –…

இலங்கையில் நடைப்பெற்ற யுத்த குற்றங்கள் தொடர்பாக நீதி கிடைக்க வேண்டுமானால் வெளிநாட்டு நீதித்துறையின் உள்நுழைவு அவசியம் என முன்னாள் நீதியரசரும், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள கேள்வி பதில் ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கையின்…

‘இலங்கையின் அரசியல் நெருக்கடி தீர்க்கப்பட்டுள்ளது’

இலங்கையில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி தீர்க்கப்பட்டுள்ளமையை இந்தியா ஏற்றுக்கொள்வதாகவும் தொடர்ந்து வரும் நாள்களில் இந்தியா- இலங்கைக்கிடையிலான உறவை வளர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றப் பின்னர் இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இது குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவது,…

‘கூட்டமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் அரசாங்கம்’

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஓர் அரசாங்கத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்டுப்படுத்தப் போகிறது என்று, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் எச்சரித்தார். கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனைகளுக்கு மஹிந்த ராஜபக்‌ஷ இணங்கவில்லை எனவும்…

பிரதமரானார் ரணில்; பட்டாசு வெடித்து கொண்டாடிய தமிழர்கள்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இன்று பதவி ஏற்றதையடுத்து யாழ்ப்பாணத்திலுள்ள அவரது கட்சி ஆதரவாளர்கள் யாழ் நகரில் பட்டாசுகள் வெடிக்கவைத்து ஆரவாரப்பட்டனர். ஐக்கிய தேசியக் கடசியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்க ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்பாக இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். இதனை…

அரசியல் குழப்பத்தால் இலங்கை கடற்பரப்பில் நடந்தேறும் சம்பவங்கள்!

இலங்கையில் சமகாலத்தில் அரசியல் குழப்பம் நிலவிவரும் நிலையில் அதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பெருமளவு இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் குற்றஞ்சாட்டியுள்ளது. இது குறித்து இன்று இணையம் யாழ்.ஊடகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போது இணையத்தின் சார்பில்…

பிரதமராக பதவியேற்க வருமாறு ரணிலை அழைத்த மைத்திரி!

சிறிலங்காவின் பிரதமராக மீண்டும் பதவியேற்க வருமாறு ஐக்கியதேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபாலசிறிசேன அழைப்பு விடுத்திருக்கின்றார். இதற்கமைய ரணில் விக்கிரமசிங்க டிசெம்பர் 16 ஆம் திகதியான ஞாயிற்றுக்கிழமைமுற்பகல் 10.30 க்கு ஜனாதிபதி செயலகத்தில் ஐந்தாவது தடவையாகவும் சிறிலங்காவின்பிரதமராக ரணில் பவியேற்கவுள்ளார். சிறிலங்கா உச்ச நீதிமன்றின்…

இலங்கை அரசியல் நெருக்கடி: பிரதமர் பதவியை ராஜிநாமா செய்தார் மகிந்த…

இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ஷ தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். கொழும்பு விஜேராம இல்லத்தில் நடந்த மத வழிபாடுகளுக்கு பின்னர், மகிந்த ராஜபக்ஷ ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டார். தேசிய ஸ்திரதன்மையை நிலைநாட்ட தனது தந்தை பதவியிலிருந்து ராஜிநாமா செய்ததாக பிபிசியிடம் தெரிவித்தார் நமல்…

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பார் மைத்திரி?!

உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தலைசாய்த்து, ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுள்ள ரணில் விக்கிரமசிங்கவை இன்றிரவே பிரதமராக நியமிப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக இன்று (13) தீர்ப்பு வழங்கிய பின்னர்,…

யாழில் புலிகளின் தங்கக் காசு விற்பனை: முந்தியடிக்கும் தொழில் அதிபர்கள்…

யாழ்ப்பாணத்தில் செயற்படும் பெரும்வர்த்தகர்கள் என கூறப்படுபவர்களில் அனேகமானோர் குடாநாட்டு மக்களை ஏமாற்றியும் யுத்தகாலத்தில் பொருட்களை மிக அதிக கூடிய விலைக்கு விற்றுமே கோடீஸ்வரராக வந்தவர்கள். சாதாரணமாக சறத்துடன் வீதியி்ல நின்று மண்ணெண்ணைய் விற்ற மகேஸ்வரன் எவ்வாறு&ன்ப்ச்ப்; மிகக் குறிகிய காலத்தில் கோடீஸ்வராக வந்தவர் என்பதும் அமைச்சராக வந்தவர் என்பதும்…

நாளை பதவி விலகுகின்றார் மகிந்த ! உறுதிப்படுத்திய நாமல் !…

பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளியாகிய தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உறுதிப்படுத்தியுள்ளார். நாளைய தினம் மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியிலிருந்து விலக உள்ளதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “நாளையதினம் மஹிந்த ராஜபக்ச நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை…