பூச்சோங்கில் உள்ள கம்போங் லெம்பா கின்ராராவில் உள்ள ஒரு காகித தொழிற்சாலை இன்று பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் கிட்டத்தட்ட எரிந்து சாம்பலானது. பூச்சோங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு மதியம் 12.15 மணியளவில் ஒரு அழைப்பு வந்ததாகவும், ஜாலான் லெம்பா கின்ராராவில் உள்ள இடத்திற்கு ஒரு குழுவை…
“நான் அன்வாரின் LGBT ஆதரவு நிலைப்பாட்டை எதிர்க்கிறேன்”; ஹசான் அலி
அன்வாரின் "எல்ஜிபிடி ஆதரவு" (பெண் ஒருபால் புணர்ச்சி, ஒரே பாலர் புணர்ச்சி, இருபால் உறுப்புகளைக் கொண்டவர் மற்றும் பால் மாற்றம் விரும்புகிறவர்) நிலைப்பாடு தாம் அவருடன் இணைந்து செயல்படுவதற்கான உறவுக்கு பெரும் தடங்கலாக இருப்பதாக பாஸ்சிலிருந்து நீக்கப்பட்ட ஹசான் அலி கூறினார். "நான் ஏன் அவருடன் இணைந்து செயல்பட…
முக நூல் சர்ச்சை: யூஎஸ்எம் மாணவர் போலீஸ் ஜாமீனில் விடுதலை
நிபோங் திபாலுக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கொண்டு செல்லும் ஹெலிகாப்டருக்குக் குண்டு வைக்கப் போவதாக மருட்டியதாக கூறப்படுவது தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர் தேர்வுகளை எழுதுவதற்கு உதவியாக போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இளைஞராகவும் எதிர்கால வல்லுநராகவும் விளங்கும் அந்த யூஎஸ்எம் கட்டுமானப் பொறியியல் மாணவருக்குத்…
புரோட்டோன், டிஆர்பி-ஹைகோம் பங்கு வாணிகம் நிறுத்தப்பட்டது
தேசிய கார் தயாரிப்பு நிறுவனமான புரோட்டோன் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட், பெரிய தொழில் நிறுவனமான டிஆர்பி-ஹைகோம் பெர்ஹாட் ஆகியவற்றின் பங்கு வாணிகம் அறிவிப்பு விடுக்கப்படுவதற்காக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புர்சா மலேசியா பங்குச் சந்தைக்கு இன்று அனுப்பிய கடிதத்தில்…
பக்காத்தான் மாநாட்டு பதாதைகளில் ஏன் இந்தியர்கள் இல்லை?, டெரன்ஸ் நெட்டோ
சனிக்கிழமையன்று அலோர் ஸ்டாரில் நடைபெற்ற மூன்றாவது பக்காத்தான் ராக்யாட் மாநாடு மகத்தான வெற்றி என அந்த எதிர்த்தரப்புக் கூட்டணியின் ஆதரவாளர்கள் வருணித்துள்ளனர். என்றாலும் அங்கு சில விஷயங்கள் கண்களை உறுத்தின. அவை அற்பமானதாக தோன்றினாலும் சில தரப்புக்கள் பெரிதுபடுத்தக் கூடும். அந்த மாநாட்டுக்குச் செல்லும் பாதை நெடுகிலும் தொங்க…
NFC சொத்துக்கள் முடக்கப்பட்டாலும் அதன் வர்த்தகம் வழக்கம் போல நிகழ்கிறது
என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுவது மீது போலீஸ் விசாரணை நடத்துவதால் அதன் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் தனது வர்த்தகம் "வழக்கம் போல நிகழ்வதாக" என்எப்சி கூறுகிறது. "வாடிக்கையாளர்கள் மாட்டிறைச்சிக்கு வழங்கிய எல்லா அளிப்பாணைகளும் பூர்த்தி செய்யப்படும். பாதிப்பு ஏதுமில்லை," என…
ஷாரிஸாட் திரும்பி வரப்போவதில்லை, கிட் சியாங்
தற்போது மூன்று வார விடுப்பில் சென்றிருக்கும் அம்னோ மகளிர் பிரிவு தலைவர் ஷாரிஸாட் அப்துல் ஜாஜில் மீண்டும் வேலைக்குத் திரும்புவார் என்று மலேசியர்கள் எதிர்பார்க்கலாகாது என்று மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங் கூறுகிறார். சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் என்எப்சி விவகாரம் குறித்து போலீஸ் விசாரணை தொடங்கியதும் அவர்…
காதிர்: அழியா மை மட்டும் சுதந்திரமான தேர்தலை உறுதி செய்யாது
அழியா மையை அறிமுகம் செய்வது மட்டும் சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை உறுதி செய்யாது. தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்னைகளும் இருப்பதாக முன்னாள் அமைச்சரும் அம்னோ மூத்த யஉறுப்பினருமான அப்துல் காதிர் ஷேக் பாட்சி கூறுகிறார். அரசியல் களத்தில் இரு புறத்திலும் உள்ள கட்சிகளுக்கு ஊடகங்களில் சமமான வாய்ப்பு கொடுக்கப்பட…
நீக்கப்பட்டதை எதிர்த்து ஹசான் அலி முறையீடு செய்ய மாட்டார்
பாஸ் கட்சியிலிருந்து தாம் நீக்கப்பட்டதற்கு எதிராக முறையீடு செய்யுமாறு ஆதரவாளர்கள் கேட்டுக் கொண்ட போதிலும் தாம் அவ்வாறு செய்யப் போவதில்லை என முன்னாள் பாஸ் சிலாங்கூர் ஆணையாளர் ஹசான் அலி கூறியிருக்கிறார். மதமாற்றத்தை எதிர்க்கும் ஹிம்புன் என்னும் அமைப்பு ஏற்பாடு செய்த கலந்துரையாடல் நிகழ்வில் அவர் நேற்றிரவு பேசினார்.…
பக்காத்தான் மாநாட்டின் இறுதி நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள்
மூன்றாவது தேசிய பக்காத்தான் ராக்யாட் மாநாடு மிகுந்த உற்சாகத்துடன் நேற்றிரவு முடிவடைந்தது. நேற்றிரவு அலோர் ஸ்டாரில் உள்ள சுல்தான் ஹலிம் அரங்கில் நிகழ்ந்த பேரணியில் 10,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அந்த அரங்கத்துக்கு இரண்டு கிலோமீட்டர் தொலைவு வரையில் கார்கள் சாலை ஒரங்களில் நிறுத்தப்பட்டிருந்தன. என்றாலும் பக்காத்தான் ஆதரவாளர்கள்…
ஊழலிலிருந்து விடுபட்ட அரசாங்கத்தை அமைப்பதாக பக்காத்தான் வாக்குறுதி
பக்காத்தான் ராக்யாட்டின் உயர் நிலைத் தலைமைத்துவம் உள் வலிமையை ஒருமுகப்படுத்திக் கொள்ளவும் எதிர்த்தரப்புக் கூட்டணியின் போராட்டத்தை சீர்குலைக்கக் கூடிய எல்லா வகையான ஊழல்களிலிருந்து விலகியிருக்கப் போவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளது. நேற்று ஈராயிரம் பேர் கூடியிருந்த பக்காத்தான் மாநாட்டில் டிஏபி, பிகேஆர், பாஸ் தலைவர்கள் தங்களது கரங்களை உயர்த்தி ஐந்து…
தைப்பொங்கல் நேரடி ஒளிபரப்பு!
முன்னேறத் துடிக்கும் சமூகத்தின் எழுச்சிக் குரலான செம்பருத்தி இணையத்தளம் தமிழர்களின் புத்தாண்டு Read More
தைப்பொங்கல் – தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்!
தமிழ் மரபில் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது தொன்றுதொட்டு சொல்லிவருவது வழக்கம். ஏனென்றால் ஐப்பசியில் மழை பெய்து தையில் விளைச்சல் கண்டு விவசாயிகள் பொருளாதார வளம் காண்கிற நாள். அதுமட்டுமல்ல, உழைப்பின் பெருமையை உலகுக்கு உரைக்கும் தமிழர்களின் தலைசிறந்த விழாவான பொங்கல் பண்டிகையும் கொண்டாடப்படுவதால் மாதத்தில் தை…
என்எப்சி சொத்துக்கள் முடக்கப்பட்டு விட்டன என்கிறார் பிரதமர்
அரசாங்கம் எளிய நிபந்தனையுடன் வழங்கிய 250 மில்லியன் ரிங்கிட் கடனை என்எப்சி என்னும் தேசிய விலங்குக் கூட நிறுவனம் தவறாகப் பயன்படுத்தியுள்ளது என அண்மையில் குற்றச்சாட்டுக்கள் எழுந்ததைத் தொடர்ந்து அதன் சொத்துக்கள் முடக்கப்ப்பட்டு விட்டதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியுள்ளார். தமது அமைச்சு கடமைகளிலிருந்து மூன்று வார…
அம்னோ எதிர்க்கட்சிகளுக்கு ‘உதை பந்தாகி’ வருகிறது என நஜிப் வருத்தம்
எதிர்க்கட்சிகள் உள் பிரச்னைகளை எதிர்நோக்கும் போது அம்னோவையும் பிஎன் -னையும் குற்றம் சாட்டுவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சாடியுள்ளார். "அம்னோ ஏன் உதை பந்தாக வேண்டும் என்பதே கேள்வியாகும். பாஸ் கட்சிக்குள் உட்பூசல் மலிந்திருப்பதே அதற்குக் காரணமாகும்." "பாஸ் கட்சிக்குள் பிளவுகள் தோன்றுவது அதன் உள் விவகாரமாகும்.…
புத்தெழுச்சி பெற்ற பக்காத்தான் போருக்குத் தயாராகிறது
புத்ராஜெயாவை பக்காத்தான் ராக்யாட் எடுத்துக் கொள்வது பற்றிய பேச்சுக்களைக் கேட்டுக் கேட்டு களைப்படைந்து விட்டதாக விவாத அரங்கு ஒன்றில் மாணவர் பேராளர் ஒருவர் கூறிய போது "நான் களைப்படையவில்லை" என பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கூறினார். PTPTN. என்ற மாணவர் கடன்கள் தொடர்பான பிரச்னைகளை மாணவர்கள்…
ஊழல் நடைமுறைகளிலிருந்து விலகியிருங்கள் என நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி அறிவுரை
நீதிபதிகள் தங்களது பதவிகளைத் தவறாக பயன்படுத்தக் கூடாது என்றும் ஊழல் நடைமுறைகளிலிருந்து Read More
பயணப் பாதைகளை கைவிடுவது முழுக்க முழுக்க வர்த்தக முடிவு என்கிறார்…
ஏர் ஏசியா x இழப்பை ஏற்படுத்தி வரும் தனது நான்கு அனைத்துலக பயணப் பாதைகளை கைவிட்டிருப்பது முழுக்க முழுக்க வர்த்தக முடிவு என அந்த விமான நிறுவனத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டோனி பெர்ணான்டெஸ் கூறுகிறார். கோலாலம்பூர்-மும்பாய், புது டில்லி, பாரிஸ், லண்டன் பயணச் சேவைகளை…
அன்வார் விடுதலைக்கு எதிராக முறையீடு செய்வது பற்றிய கேள்வியை ஏஜி…
கடந்த திங்கட்கிழமை அன்வார் இப்ராஹிம் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சட்டத் துறைத் தலைவர் அலுவலகம் முறையீடு செய்யுமா என்னும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை ஏஜி என்ற சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்ல் தவிர்த்துள்ளார். அன்வார் பற்றி ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் தாம் மீன் பிடிக்கச்…
ஊழல் தடுப்புத் திட்டத்தைக் காட்டுங்கள் என பக்காத்தானுக்கு அம்பிகா சவால்
அடுத்த பொதுத் தேர்தலில் ஆட்சிக்கு வந்தால் ஊழலை எவ்வாறு ஒடுக்கப் போகிறோம் என்பதற்கான திட்டங்களை வழங்குமாறு பெர்சே 2.0 அமைப்பின் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் எதிர்த்தரப்பு பக்காத்தான் கூட்டணியை கேட்டுக் கொண்டுள்ளார். அவர் இன்று அலோர் ஸ்டாரில் நிகழும் பக்காத்தான் மாநாட்டில் மக்கள் குரல் அங்கத்தில் பேசினார். நாட்டிலிருந்து…
ஏஜி: பொதுக் கூட்ட மசோதா பேச்சுச் சுதந்திரத்துக்கு ஊக்கமூட்டுகிறது
பெரிதும் குறை கூறப்பட்டுள்ள அமைதியான பொதுக் கூட்ட மசோதா 'பேச்சுச் சுதந்திரத்தை ஊக்குவிப்பதை' நோக்கமாகக் கொண்டுள்ளது என சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்ல் கூறுகிறார். எந்த ஒரு சட்டமும் அனைவரையும் திருப்திப்படுத்த முடியாது என்றும் அவர் சொன்னார். நாடாளுமன்றத்தில் வெகு வேகமாக நிறைவேற்றப்பட்ட அந்த மசோதா குறித்து…
பிஎன் உள்-ஆட்கள் பொதுத் தேர்தலில் பக்காத்தானில் வெற்றி பெற உதவுகின்றனர்
ஆளும் கூட்டணியை வீழ்த்துவதற்கு பிஎன் உறுப்பினர்கள் உள்ளுக்குள் இருந்து கொண்டு எதிர்த்தரப்புக்கு உதவி வருவதாக பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு இன்று கூறிக் கொண்டுள்ளார். அவர் பக்காத்தான் ராக்யாட் மாநாட்டை தொடக்கி வைத்துப் பேசினார். அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நிகழும் கடைசி பக்காத்தான் மாநாடாக அது…
கம்போங் மேடான் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா?
முன்னாள் தலைமை நீதிபதி சாலே அபாஸ் மற்றும் இரு நீதிபதிகளையும் அவர்களுடைய பதவிகளிலிருந்து 1988 ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் தூக்கி எறிந்தார். அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பிற்கு நீதி வழங்கப்பட்டது. ஆனால், 2001 ஆம் ஆண்டில் கம்போங் மேடான் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று வரையில் நீதி மறுக்கப்பட்டுள்ளது.…
ரஷிட்: PSC யோசனைகளை ‘ஒரு வாரத்தில்’ அமலாக்கி விடலாம்
தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு (பிஎஸ்சி) யோசனைகள் வெறும் நடைமுறை மாற்றங்களே. அவற்றை ஒரு வாரத்தில் அமலாக்கி விடலாம் என்று தேர்தல் ஆணையத்தின் (இசி) முன்னாள் தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான் கூறுகிறார். "பிஎஸ்சி தெரிவித்துள்ள யோசனைகளை தேர்தல் விதிமுறைகளை மாற்றினால் போதும். அதனை…