அறிக்கையாளர்கள் எல்லைகள் அற்ற அமைப்பின் (RSF) 2026-ஆம் ஆண்டிற்கான உலக ஊடக சுதந்திரக் குறியீட்டில், மலேசியா கடந்த ஆண்டு பெற்ற 88-வது இடத்திலிருந்து தற்போது 95-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டில் 56.09 புள்ளிகளைப் பெற்றிருந்த மலேசியா, இந்த ஆண்டு 52.73 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. மலேசியா…
நஜிப் தென்னாப்பிரிக்காவிலிருந்து தாயகம் திரும்பினார்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தென்னாப்பிரிக்காவுக்கு மேற்கொண்ட இரண்டு நாள் அலுவல் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று தாயகம் திரும்பியிருக்கிறார் பிரதமரையும் அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோரையும் ஏற்றி வந்த சிறப்பு விமானம் பிற்பகல் மணி 2.40க்கு சிப்பாங்கில் உள்ள கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தது. தென்னாப்பிரிக்காவை…
‘பக்காத்தான் தவறான கருத்துக்களை வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்’
பக்காத்தான் ராக்யாட் அன்வார் இப்ராஹிமுக்கு எதிரான குதப்புணர்ச்சி வழக்கு தொடர்பில் "தனது விருப்பம் போல் வெளியிட்ட தவறான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களுக்காக" பொது மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். இவ்வாறு கெரக்கான் துணைத் தலைவர் சாங் கோ யுவான் இன்று விடுத்த ஒர் அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார். பக்காத்தான் ராக்யாட்…
அன்வார் தீர்ப்பு: முறையீடு செய்வதற்கு முன்னர் தீர்ப்பை அரசு தரப்பு…
குதப்புணர்ச்சி குற்றச்சாட்டிலிருந்து அன்வார் இப்ராஹிம் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக முறையீடு செய்து கொள்வதா இல்லையா என்பதை அரசு தரப்பு உடனடியாக முடிவு செய்யவில்லை. அந்தத் தீர்ப்பின் விளைவுகளைத் தாங்கள் விவாதிக்கப் போவதாக பதவி விலகிச் செல்லும் சொலிஸிட்டர் ஜெனரல் II முகமட் யூசோப் ஜைனல் அபிடின் மலேசியாகினியிடம் கூறினார். "ஆய்வு…
ஹசானைப் பதவி அகற்ற அரச ஒப்புதல் தேவையில்லை
சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம், பாஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஹசான் அலியை மாநில ஆட்சிக்குழுவிலிருந்து அகற்ற சிலாங்கூர் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா-வின் ஒப்புதல் தேவை என்று கூறப்படுவதை மறுத்துள்ளார். Read More
சைபூல்:தீர்ப்பை ஏற்கிறேன்,ஆனாலும்……
சைபூல் புகாரி அஸ்லான், குதப்புணர்ச்சி வழக்கு II தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறார் ஆனாலும் அன்வார் இப்ராகிம் மீது சுமத்திய குற்றச்சாட்டை மீட்டுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதைக் கோடி காட்டியுள்ளார். Read More
ராயிஸ்: அன்வார் தீர்ப்பு நீதிமன்றங்கள் சுதந்திரமானவை என்பதைக் காட்டுகின்றது
அரசியல் முலாம் பூசப்பட்ட குதப்புணர்ச்சி வழக்கிலிருந்து எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் எதிர்பாராத வகையில் விடுவிக்கப்பட்டுள்ளது மலேசிய நீதிமன்றங்கள் சுயேச்சையாக இயங்குவதைக் காட்டுவதாக அரசாங்கம் இன்று கூறியது. "மலேசியா சுதந்திரமான நீதித் துறையைப் பெற்றுள்ளது. நீதிபதிகளுடைய முடிவுகள் மீது அரசாங்கம் செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை என்பதையும் அந்தத் தீர்ப்பு மெய்பிக்கிறது,"…
டூத்தா நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில் வெடிப்பு சம்பவம்
கோலாலம்பூரில் டூத்தா நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில் இன்று காலை மணி 10.00 அளவில் ஒர் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்திருப்பதை போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது. அந்த அறிவிப்பு போலீஸ் படையின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த இடத்திலிருந்து பொது மக்கள் கலைந்து செல்ல வேண்டும் என்றும் அது அறிவுரை கூறியது. ஆனால்…
நான் இறுதியில் குற்றமற்றவன் என நிரூபிக்கப்பட்டேன் என்கிறார் அன்வார்
அன்வார் இப்ராஹிம் தமது 23 வயது முன்னாள் உதவியாளரான முகமட் சைபுல் புஹாரி அஸ்லானை குதப்புணர்ச்சியில் ஈடுபடுத்தியதாக கூறும் குற்றச்சாட்டிலிருந்து அவரை இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. 64 வயதான அந்த பிகேஆர் மூத்த தலைவரை விடுவித்த நீதிபதி முகமட் ஜபிடின் முகமட் டியா, அரசு…
குதப்புணர்ச்சி வழக்கு II தீர்ப்பு: அன்வார் குற்றவாளி அல்ல (விரிவாக)
உயர் நீதிமன்ற நீதிபதி முகமட் ஜபிடின், அன்வாரை விடுதலை செய்து குதப்புணர்ச்சி குற்றச்சாட்டிலிருந்து விடுவித்தார். காலை மணி 9.23 அளவில் அந்தத் தீர்ப்பை வழங்கினார். டிஎன் ஏ என்ற மரபணுச் சோதனையை நீதிமன்றம் 100 விழுக்காடு ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அதனால் அன்வாரை குதப்புணர்ச்சி குற்றச்சாட்டிலிருந்து நீதிமன்றம்…
குதப்புணர்ச்சி வழக்கு II தீர்ப்பு: அன்வார் குற்றவாளி அல்ல
உயர் நீதிமன்ற நீதிபதி முகமட் ஜபிடின், அன்வார் இப்ராஹிமை குதப்புணர்ச்சி வழக்கிலிருந்து விடுதலை செய்து குற்றச்சாட்டிலிருந்தும் விடுவித்தார். காலை மணி 9.23 அளவில் அந்தத் தீர்ப்பை வழங்கினார். விவரங்கள் பின்னர்
அன்வார் தீர்ப்பை செவிமடுக்க டூத்தா நீதிமன்ற வளாகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள்
கோலாலம்பூர் ஜாலான் டூத்தாவில் அமைந்துள்ள நீதிமன்ற வளாகத்தின் ஐந்தாவது மாடியில் உள்ள மூன்றாவது நீதிமன்றத்தில் இன்று காலை குதப்புணர்ச்சி வழக்கு IIல் தீர்ப்பு வழங்கப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக குதப்புணர்ச்சி குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார் அந்தக் குற்றச்சாட்டை அரசியல் சதி என 64 வயதான அன்வார் இப்ராஹிம்…
அன்வார் இரவு உரை: கோலாலம்பூரில் ஆயிரக்கணக்கானோர் கூடினர்
குதப்புணர்சி வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதற்கு முன்பாக அன்வார் இப்ராகிமின் "இறுதி செய்தியை" கேட்பதற்காக கோலாலம்பூர், கம்போங் பாருவில் ஆயிரக்கணக்கானோர் இன்றிரவு குழுமினர். அன்வாருடன் எதிரணியின் முக்கிய தலைவர்களான பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு, பிகேஆர் உதவித் தலைவர்கள் நுருல் இஸ்ஸா அன்வார் மற்றும் தியன் சுவா,…
சேவியர்: ஏழை மாணவர்களுக்கு இலவச தொழிற்கல்வி, உடனடியாக மனு செய்யவும்
சிலாங்கூர் மாநில அரசின் உதவியில் 2012 ஆம் கல்வி ஆண்டில் இலவச தொழிற்கல்வி கற்க விரும்பும் ஏழை மாணவர்கள் இப்பொழுதே பதிந்துக் கொள்ளலாம். இப்பொழுது பதிவு நடந்துக் கொண்டிருப்பதால் மாணவர்கள் இவ்வாய்பை நன்கு பயன் படுத்திக் கொள்ள முந்திக்கொள்ள வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர்…
டிஏபி: பிரதமர் பதவிக்கு நாங்கள் குறி வைக்கவில்லை அன்வாரே எங்கள்…
புத்ராஜெயாவை பிடிக்க டிஏபி எண்ணம் கொண்டிருந்தாலும் அது பிரதமர் பதவிக்கு குறி வைக்கவில்லை என அதன் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறுகிறார். அவர் இன்று தேசிய டிஏபி மாநாட்டில் கொள்கை உரையாற்றினார். அந்தப் பதவிக்கு டிஏபி ஒரே ஒரு வேட்பாளரை மட்டுமே கொண்டுள்ளது. அதுதான் பிகேஆர்…
முன்னாள் அம்னோ பேராளரும் வலைப்பதிவாளரும் டிஏபி-யில் இணைந்தனர்
அம்னோ உறுப்பினர்களான இரண்டு பிரபலமான வலைப்பதிவாளர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக டிஏபி-யில் இணைந்தனர். அதனால் அவர்களுடைய அரசியல் எதிர்காலம் குறித்த ஊகங்கள் முடிவுக்கு வந்துள்ளன. புலாவ் மானிஸ் தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினர் முகமட் அரீப் சாப்ரி அப்துல் அஜிஸ், நெகிரி செம்பிலானில் மூத்த அம்னோ உறுப்பினர் அஸ்பான் அலியாஸ் ஆகியோரே…
ஹசான் அலி பாஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்
பாஸ் கட்சியின் சிலாங்கூர் மாநில முன்னாள் ஆணையர் ஹசான் அலி அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். பாஸ் கட்சியின் மத்திய குழு இன்று விடுத்த ஓர் அறிக்கையில் இம்முடிவைத் தெரிவித்தது. "கட்சியின் நலன்களுக்கு ஹசானின் நடவடிக்கைகள் பாதகமாக இருந்ததோடு பிரச்னைகளையும் ஏற்படுத்தியதால் கட்சியின் விதிகளுக்கு ஏற்ப இம்முடிவு எடுக்கப்பட்டது", என்று அறிக்கை…
அன்வார் விடுவிக்கப்படுவார், கர்பால் நம்பிக்கை
அன்வார் இப்ராகிமை பிரதமராகக் காத்திருப்பவர் என்று வருணித்த டிஏபி தேசிய தலைவர் கர்பால் சிங், பிகேஆர் நடப்பில் தலைவர் குதப்புணர்ச்சி வழக்கில் விடுவிக்கப்படுவார் என்று முழு நம்பிக்கை கொண்டிருக்கிறார். “நாளை அன்வார் விடுவிக்கப்படுவார். அதில் எள்ளளவும் ஐயப்பாடு இல்லை. விடுதலை பெறும் தகுதி அவருக்கு உண்டு”, என்று கர்பால்…
அன்வார்:சிறைவாழ்க்கைக்கு மனதளவில் தயாராகி விட்டேன்
நாளைய தீர்ப்பில், நடப்பில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டால் அவருக்கு 20ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அதை அவர் எப்படி எதிர்கொள்வார்? “மனதளவில் சிறைவாழ்க்கைக்குத் தயராகிவிட்டேன்”, என்கிறார் அவர். வியாழக்கிழமை மலேசியாகினியுடனான நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்தார். “சிறைவாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அலசி ஆராய்ந்து…
வான் அஜிஸாவின் மெய்க்காவலர் மயங்கி விழுந்தார், விஷமா?
பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அஜிஸா வான் இஸ்மாயிலின் மெய்க்காவலர் கூர்மையான விஷம் தோய்க்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பொருள் ஒன்றினால் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட பின்னர் நேற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பினாங்கில் அன்வாருடைய சொந்த ஊரான செரோக் தோக் குன்-னில் சொற்பொழிவு முடிவடைந்த நேரத்தில் அந்த மெய்க்காவலர் மயங்கி விழுந்ததாக பிகேஆர்…
வெப்பம் தணிந்ததும் பலாத்காரம் காட்டப்படும்
"துரதிஷ்டவசமாக நீங்கள் ஒரு நீதிபதியை சந்திக்கும் எந்த சூழ்நிலையிலும் அவரை ஊழல் பேர்வழி என்றே நீங்கள் உடனடியாக எண்ணுகின்றீர்கள்." திங்கட்கிழமை கிழமை தீர்ப்பு "குற்றவாளி அல்ல" என தீர்ப்பளிக்கப்பட்டால்? நியாயம்: நாம் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கும் நீதிபதி ஜபிடின் முகமட் டியாவுக்கும் நாம் அனைவரும் இறைவனை வேண்டுவோம்-…
901 மீதான போலீஸ் நிபந்தனைகளுக்கு பிகேஆர் பணியாது
திங்கள்கிழமை கூட்டம் கூடுவதற்கு அனுமதி வழங்கியபோது நகர போலீஸ் எவ்வித நிபந்தனைகளையும் விதிக்கவில்லை என்று பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி இன்று கூறினார். கூட்டம் நடத்துவது மீதான ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர் அதிகாரிகள் விதித்துள்ள நிபந்தனைகளை கட்சி கடைபிக்காது என்றாரவர். கோலாலம்பூர் போலீஸ் தலைவர் முகம்மட் சாலேயுடன்…
தென் ஆப்ரிக்க என்சி 100 ஆண்டு நிறைவு நாள் நிகழ்ச்சியில்…
தென் ஆப்ரிக்கா அதிபர் ஜேக்கப் ஜூமாவின் அழைப்பின்பேரில் இரண்டு நாள் வருகை மேற்கொண்டு மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் தென் ஆப்பிரிக்காவுக்கு இன்று புறப்பட்டார். நஜிப்புடன் அவரது துணைவியார் ரோஸ்மா மன்சூரும் செல்கிறார். அவர்கள் கேல் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து இன்று பிற்பகல் மணி 3.00 புறப்படனர். முதன்முறையாக…
கிள்ளானில் மீண்டும் இண்டர்லோக் தலைதூக்கியுள்ளது
இண்டர்லோக் நாவல் இவ்வாண்டிலிருந்து பாடநூல் திட்டத்திலிருந்து மீட்டுக்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சு கடந்த மாதம் அறிவித்திருந்தது. ஆனால், அந்நூல் மீண்டும் மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. கிள்ளானில் மூன்று பள்ளிகளின் மாணவர்களுக்கு இண்டர்லோக் நாவல் கொடுக்கப்பட்டுள்ளது என்று தமக்கு புகார் வந்திருப்பதாக எல்.சேகரன் தகவல் அளித்தார். எஸ்எம்கே ராஜா மஹாடி,…


