மியான்மர் அரசுக்கு எதிரான எங்கள் சண்டை தொடரும்: அர்சா கிளர்ச்சியாளர்கள்

மியான்மர் அரசுக்கு எதிரான எங்கள் சண்டை தொடரும் என சிறுபான்மை ரோஹிஞ்சா முஸ்லிம்களை கொண்ட அர்சா என்று தன்னை அழைத்துக் கொள்ளும் கிளர்ச்சியாளர்கள் அமைப்பு கூறியுள்ளது. கடந்த ஆண்டு அரக்கான் ரோஹிஞ்சா சால்வேஷன் ஆர்மி (அர்சா) தொடுத்த ஒரு தாக்குதல், கடுமையான ராணுவ நடவடிக்கைக்கு காரணமாக அமைந்தது. ராணுவ…

தண்ணீர், மின்சார கட்டணம் செலுத்தக் கோரி போராடிய செளதி இளவரசர்கள்…

செளதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள அரச அரண்மனையில் போராட்டத்தில் ஈடுபட்ட 11 இளவரசர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அரச குடும்பத்தினருக்கு தண்ணீர் மற்றும் மின்சார கட்டணத்தை செலுத்துவதை நிறுத்த வேண்டும் என்ற அரசின் முடிவால் இவர்கள் கோபமடைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. எண்ணெய் சார்ந்துள்ளது நிலையைக்…

மெக்சிகோவில் காரின் மீது துண்டிக்கப்பட்ட மனித தலைகள்

மெக்சிகோ சிட்டி, மெக்சிகோ நாட்டில் வெராகுரூஸ் நகர பகுதியில் உள்ள ஒரு சாலையில் ஒதுக்குப்புறமாக ஒரு வாடகைக் கார் நிறுத்தப்பட்டிருந்தது. அந்தக் காரின் முன்புறம் என்ஜின் மூடியின் மேல், துண்டிக்கப்பட்ட 5 மனித தலைகள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைக்கண்டவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை…

சீனாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணையால் இந்தியாவுக்கு அச்சுறுத்தலா?

சீன பாதுகாப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, அந்நாட்டின் புதிய ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை DF-17 (கண்டங்களுக்கு இடையே பாய்ந்து தாக்கும் அதிவேக ஏவுகணை) அமெரிக்கா வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. 12,000 கி.மீ. தொலைவுவரை தாக்கும் திறன் கொண்ட DF-17, அமெரிக்காவின் எந்தவொரு பகுதியையும் ஒரு மணி நேரத்திற்குள்…

23 பொதுமக்கள் பலியாகினர்; 7 ரஷ்ய விமானங்கள் அழிப்பு

சிரியாவின் இருவேறு பகுதிகளில் இரு வேறு நேரங்களில் இடம்பெற்ற வெவ்வேறான இரு தாக்குதல்களில், குறைந்தது 23 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு, 7 ரஷ்ய விமானங்கள் அழித்தொழிக்கப்பட்டன. போராளிகளால் கட்டுப்படுத்தப்படும், சிரியாவின் கிழக்குப் பகுதி நகரான கௌட்டாவில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தாக்குதல்களில், குறைந்தது 23 பொதுமக்கள் உயிரிழந்தனர். மிஸ்ரபா என்ற…

ஆப்கானிஸ்தானில் தற்கொலைபடை தாக்குதல்: 11 பேர் பலி

காபூல், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகே உள்ள பனாயி என்ற பகுதியில் தனியார் கட்டிடத்தில் இரவு நேரத்தில் புகுந்த தற்கொலை பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் 5 போலீசார் உட்பட 11 பேர் உடல்சிதறி பலியாகினர். 25 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்தவித அமைப்பும்…

பெரு பஸ் விபத்தில் 48 பேர் பலி

பெருவின் கடற்கரையோர மலையுச்சியிலிருந்து பஸ்ஸொன்று விழுந்து விபத்துக்குள்ளானதில், குறைந்தது 48 பேர் உயிரிழந்தனர். ட்ரக் ஒன்றுடன் மோதிய பின்னரே, பஸ் கீழே விழுந்து, விபத்துக்குள்ளானது என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தலைநகரிலிருந்து 130 கிலோமீற்றர்கள் வடக்காக உள்ள ஹுவாச்சோ என்ற இடத்திலிருந்து, தலைநகருக்கு, 55 பயணிகளுடனும் 2 பணியாளர்களுடனும், அந்த…

அரசுக்கு எதிரான கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது: இரான் ராணுவத் தளபதி

இரானில் கடந்த ஒருவாரமாக அலையலையாக நடந்த அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அரசுக்கு எதிரான கிளர்ச்சி என்று வருணித்த இரான் ராணுவத் தளபதி ஜெனரல் முகமது அலி ஜஃபாரி, தற்போது கிளர்ச்சி முறியடிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இரானில் நிலவிவந்த அமைதியற்ற நிலையை எதிர்கொள்வதற்காக அரசுக்கு ஆதரவான பேரணிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து…

பாலத்தீனத்திற்கான உதவிகள் நிறுத்தப்படலாம்: டிரம்ப் அச்சுறுத்தல்

அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபாடு காட்டாத பாலத்தீனத்திற்கு அமெரிக்கா அளித்து வரும் உதவிகள் நிறுத்தப்படலாம் என்று அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் கணக்கில் பாகிஸ்தானை மேற்கோள் காட்டி டிரம்ப், "பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல, பல நாடுகளுக்கு எந்த பலனும் இல்லாமல் நாம் பல பில்லியன் டாலர்கள் அளித்து…

இரான்: போராட்டங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு

இரான் அரசுக்கு எதிராக ஆறாவது நாளாக நடந்து வரும் போராட்டத்தில் ஒரே இரவில் ஒன்பது பேர் இறந்துள்ளனர், என்று இரான் அரசு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் இந்தப்போராட்டங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 22-ஐ எட்டியுள்ளது. காவல் நிலையத்திலிருந்து துப்பாக்கிகளை கைப்பற்ற முயன்ற போது ஆறு போராட்டக்காரர்கள் இறந்துள்ளனர். பதினோரு…

போராட்டத்தில் 10 பேர் பலி: இரான் தலைவர்களை விமர்சித்த டிரம்ப்

இரானில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. "பல்வேறு நகரங்களில் நேற்றிரவு நடைபெற்ற போராட்டங்களில், துரதிஷ்டவசமாக சுமார் 10 பேர் உயிரிழந்ததாக" செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த வியாழக்கிழமை, போராட்டம் தொடங்கியதில் இருந்து குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த…

எங்களிடம் உதவி வாங்கிக்கொண்டு எங்களையே ஏமாற்றுகிறது பாகிஸ்தான்: டிரம்ப்

சமீப ஆண்டுகளில், அமெரிக்காவிடம் இருந்து பல பில்லியன் டாலர் பணத்தை உதவியாகப் பெற்றபோதிலும், பாகிஸ்தான் அமெரிக்காவிடம் பொய் கூறுவதாகவும், ஏமாற்றுவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆப்கானிஸ்தானை தளமாகக் கொண்ட அமெரிக்க படைகளால் தேடப்பட்ட தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளித்ததாக தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார். ஆகஸ்ட் மாதம்…

இரான்: வன்முறையாக மாறிய மூன்றாவது நாள் போராட்டம்

இரானில் சில நகரங்களில் நடந்து வரும் போராட்டங்கள், வன்முறையாக மாறி வருவதைக் காணொளிக் காட்சிகள் காட்டுகின்றன. இரானில் மக்களின் வாழ்க்கைத்தரம் குறைந்து வருகிறது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்தி பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், "சட்டவிரோதக் கூட்டங்களை" தவிர்க்க வேண்டும் என இரான் உள்துறை அமைச்சர் எச்சரித்ததையும்…

வட கொரியாவுக்கு எண்ணெய் கொண்டு சென்ற 2-ஆவது கப்பல் பறிமுதல்

சர்வதேச தடைகளை மீறி வட கொரியாவுக்கு எண்ணெய் கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் விவகாரத்தில் இரண்டாவது கப்பலை பறிமுதல் செய்துள்ளதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பனாமாவிலிருந்து புறப்பட்ட கோட்டி என்ற இந்த கப்பலானது பியாங்டெக்கின் மேற்கு பகுதியிலுள்ள துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 600 டன் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யை ரகசியமாக…

2017 – ஆண்டு உலகளவில் நடந்த முக்கிய விடயங்கள், ஒரு…

சர்வதேச நாட்டாமை: அமெரிக்காவின் 45-வது அதிபராக ஜனவரி 20-ம் தேதி டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக்கொண்டார். குடியரசுக்கட்சியை சேர்ந்த டிரம்ப் பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றார். பதவியேற்றது முதலே சில அதிரடி நடவடிக்கைகள் மூலம் ஆண்டின் அனைத்து மாதங்களிலும் டிரம்ப் ட்ரெண்டிங்கில் இருந்துள்ளார். அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு,…

தாய்லாந்து: பண மோசடி செய்தவருக்கு 13,275 ஆண்டுகள் சிறை

பண மோசடியில் ஈடுபட்ட ஒரு நபருக்கு 13,275 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தாய்லாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 34 வயதான புடிட் கிட்டித்ரடிலோக், தன் நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மிக அதிகளவிலான லாபம் திருப்பி அளிக்கப்படும் எனக்கூறி மோசடி செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். புடிட்டின் அறிவுறுத்தலின்படி, சுமார் 40,000 பேர்…

எகிப்து நாட்டில் தேவாலயம் மீது பயங்கரவாத தாக்குதல்: 10 பேர்…

கெய்ரோ, எகிப்து தலைநகர் கெய்ரோ அருகில் அமைந்துள்ள ஹெல்வான் மாவட்டத்தில்  உள்ள கிறிஸ்தவ தேவாலய வாயிலை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த பயங்கரவாதி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளான். அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் ராணுவத்தினர் பயங்கரவாதியை  தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால், அதற்குள் பயங்கரவாதி தனது கையில் …

சீனா – வடகொரியா இடையே சட்டவிரோத எண்ணெய் பரிமாற்றம்: டிரம்ப்…

வடகொரியாவிற்கு எண்ணெய் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் சீனாவின் நடவடிக்கை தமக்கு "மிகுந்த வருத்தமளிப்பதாக" அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கை வெளிவந்ததையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், இதில் சீனா "கையும் களவுமாக பிடிபட்டுள்ளதாக" குறிப்பிட்டுள்ளார். பியாங்யாங்கிற்கு எண்ணெய் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படுமானால்,…

ஆங்கிலத்தில் இரண்டாயிரம் வார்த்தைகளை கற்று கொண்ட, கொரில்லா கோகோ..

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மிருகக்காட்சி சாலையில் கடந்த 1971-ல் ஜாக்குலின் என்ற கொரில்லா குரங்குக்கு பிரசவம் நடந்தது. பிரசவத்தில் ஜாக்குலினுக்கு பெண் கொரில்லா பிறந்தது. ஆனால் 6 மாதம் ஆனதும்   ஜாக்குலின் கொரில்லா தனது குட்டியை ஏற்று கொள்ளவில்லை. இதை தொடர்ந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் சைக்காலஜி…

ஆப்கானிஸ்தான்: தற்கொலை குண்டுத் தாக்குதலில் 40 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்குப் பகுதியில் உள்ள, ஷியா இஸ்லாமிய பிரிவைச் சேர்ந்த ஒரு கலாசார மற்றும் மத அமைப்பின் மையத்தில், வியாழன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறைந்தபட்சம் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர். அதே பகுதியில் இரண்டு குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்குப் பிறகு…

உலகப் பெண்கள் சதுரங்க சாம்பியன், சவுதி போட்டியில் பங்கேற்க மறுப்பு

சவுதி அரேபியாவில் நடைபெறவுள்ள சதுரங்கப் போட்டியில் கலந்துகொள்வதற்குப் பதில், தனது 2 விருதுகளையும் இழக்க, உலகப் பெண்கள் சதுரங்க சாம்பியன் தயாராக உள்ளார் என  ஸ்தெப்ஃபீட் (StepFeed) போர்டல் அறிக்கை வெளியிட்டுள்ளது. உக்ரைனைச் சேர்ந்த சதுரங்கச் சாம்பியன், அன்னா முஷிசுக், 27, கடந்த ஆண்டு காட்டார், டோஹாவில் சதுரங்கப் போட்டியில்…

பருவநிலை அகதிகள்: சிரியா கிளர்ச்சிக்கும் வெப்பநிலை மாற்றத்துக்கும் உள்ள தொடர்பு

ஐரோப்பாவில் புகலிடம் தேடுபவர்களின் எண்ணிக்கை உயர்வதற்கும், உலகெங்கும் உள்ள விவசாயப் பகுதிகளில் வெப்பநிலை உயர்வதற்கும் நேரடி தொடர்பு இருப்பதாக ஓர் ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் உள்ள 103 நாடுகளில் உள்ள விவசாயப் பகுதிகளில் வெப்பநிலை 20 டிகிரியிலிருந்து மாறுபடும்போது, அந்த நாடுகளை சேர்ந்த அதிக அளவிலான மக்கள் வேறு…

பேனசீர் படுகொலையை பாகிஸ்தான் மறைத்தது எப்படி? 10 ஆண்டுகளாக புதைந்து…

ஒரு முஸ்லிம் நாட்டை வழிநடத்திய முதல் பெண்மணி பேனசீர் பூட்டோ. இவர் கொல்லப்பட்ட 10 ஆண்டுகளில் பாகிஸ்தான் எப்படி இருக்கிறது என்பது வெளிப்பட்டிருக்கிறதே தவிர, இவரது கொலைக்கு உத்தரவிட்டவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. பிலால் எனப்படும் 15 வயதான தற்கொலை குண்டுதாரியால், டிசம்பர் 27-ம் தேதி 2007-ம் ஆண்டு பூட்டோ கொல்லப்பட்டார்.…