பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
மாணவி வித்தியாவின் வீட்டுக்கு ஜனாதிபதி விஜயம் : உதவிவழங்குவதாகவும் வாக்குறுதி!
யாழ்ப்பாணம், புங்குடுதீவில் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு படுகொலைசெய்யப்பட்ட மாணவி வித்தியாவின் வீட்டுக்குச்சென்று அவரின் தாயாரை சந்தித்து கலந்துரையாடினார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. இன்று முற்பகல் வவுனியா சைவப் பிரகாஷ மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற வவுனியா மாவட்ட ‘உத்தியோகபூர்வ பணி’ ஜனாதிபதி சேவை நிகழ்ச்சித்திட்டத்தின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி…
பிரபாகரனின் விடாப் பிடியே விடுதலைப் போராட்டத்தின் தோல்வி: இம்சை அரசன்…
இந்த இம்சை அரசன் 23ம் இமானு(வேல்) வடி(வேல்) ரவுசு தாங்க முடியவில்லை. பிரித்தானியாவில் இயங்கி வந்த பிரித்தானிய தமிழர் பேரவை(BTF) உடைத்து. தாம் உலகத் தமிழர் பேரவை என்று புறப்பட்ட நபர்கள் சிலர் உள்ளார்கள். இதில் சுரேன் சுரேந்திரன் முக்கிய கதாபாத்திரம்.. இவர் தற்போது எங்கே என்று தெரியாது.…
நீதி வழங்கும் செயற்பாடுகளை அரசியல்மயப்படுத்தக் கூடாது – ஐ.நா நிபுணர்…
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதற்கான செயற்பாடுகள், அரசியல் மயப்படுத்தப்பட்டால், நிலைமாறு கால நீதி செயற்பாடுகள் தோற்கடிக்கப்பட்டு விடும் என்று உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீளநிகழாமையை உத்தரவாதப்படுத்துவது தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் எச்சரித்துள்ளார். சிறிலங்காவுக்கு இரண்டு வாரகாலப் பயணமாக வந்துள்ள ஐ.நா சிறப்பு…
பொறுப்புக்கூறல் விவகாரங்களைத் துரிதப்படுத்துவதாக ஐ.நா சிறப்பு நிபுணரிடம் மைத்திரி வாக்குறுதி
பொறுப்புக்கூறல் விவகாரங்களை துரிதமாக முன்னெடுப்பதாக ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப்பிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்திருப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்துக்குச் சென்று,…
‘ஏகிய இராஜ்ய’வை எதிர்ப்பது ஏன்? – முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செவ்வி
சேர் பொன்னம்பலம் இராமநாதனின் குடும்பத்தைச் சேரிந்தவரான சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள், இலங்கையில் புகழ்பெற்ற ஒருவர். சட்டவாளராகவும், உயர்நீதிமன்ற நீதியரசராகவும் இருந்த இவர் தற்போது வடமாகாண முதலமைச்சராகவும் பணியாற்றுகின்றார். இவர் தனது கருத்துக்களை அச்சமின்றி வெளிப்படுத்தக்கூடிய ஒரு மனிதராகவும் திகழ்கிறார். அண்மையில் சிறிய சத்திரசிகிச்சைக்கு உட்பட்டிருந்த திரு.விக்னேஸ்வரன், பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய அரசியல்…
பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞன் – உறவினர்களின் கதறலால் சோகமயமானது…
சுவிட்சர்லாந்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட இலங்கை இளைஞனின் இறுதி கிரியைகள் இன்று உணர்வுபூர்வமாக நடைபெற்றது.இலங்கையிலிருந்து சென்ற உயிரிழந்தவரின் கதறல்களுடன் அந்தப் பகுதி பெரும் சோகமயமானது. கிளிநொச்சியை சேர்ந்த 38 வயதான சுப்பிரமணியன் கரன் என்ற இளைஞனின், சுவிஸ் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.அவரின் இறுதிக்கிரியை நிகழ்வில் பங்கேற்பதற்காக கரனின் மனைவி, பிள்ளைகள்…
யதார்த்தத்தை புரிந்து செயற்படுங்கள் – வடமாகாணசபை உறுப்பினர்களுக்கு புதுடெல்லியில் அறிவுரை
வடக்கு மாகாணசபை யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு முன்வர வேண்டும் என்று புதுடெல்லியில் நடத்தப்பட்ட, வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான வலுவூட்டல் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டுள்ளது. வடக்கு மாகாணசபையின் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான வலுவூட்டல் கருத்தரங்கு கடந்தவாரம் புதுடெல்லியில் இடம்பெற்றிருந்தது. புதுடெல்லியில் உள்ள ஓ.பி.ஜின்டால் குளோபல்…
புதிய அரசியலமைப்பை வரையும் பணிகளை உடன் நிறுத்தக் கோருகிறது சங்க…
புதிய அரசியலமைப்பை வரையும் பணிகளை சிறிலங்கா அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று, மல்வத்த, அஸ்கிரிய பீடங்களின் இணைந்த காரக மகா சங்க சபா கோரியுள்ளது. தலதா மாளிகையில் நேற்று நடந்த மல்வத்த, அஸ்கிரிய பீடங்களின் இணைந்த காரக மகா சங்க சபா உறுப்பினர்களின் சிறப்புக் கூட்டத்திலேயே இந்த முடிவு…
மைத்திரியின் யாழ். வருகையும் எதிர்வினையும்!
“புறக்கணிப்புக்கள், சத்தியாக்கிரகங்கள், ஊர்வலங்கள் என்பவற்றை மேற்கொள்வதற்கு என்று சந்தர்ப்பங்கள் உள்ளன. எடுத்ததற்கெல்லாம் அவற்றை செய்யப்போனால், அவற்றுக்குரிய மதிப்பும் பெறுமானமும் குறைந்துவிடும். இந்தப் போராட்டங்கள் அனைத்தும் என்னுடைய ஆட்சியில் தான் நடைபெறுகின்றன. முந்தைய ஆட்சியில் இதுபோன்ற போராட்டங்கள் நடைபெற்றிருந்தால், வெள்ளை வானில் வந்து பிடித்துக் கொண்டு சென்றிருப்பார்கள்.” கடந்த மார்ச்…
புதிய அரசியலமைப்பு தேவையில்லை – அஸ்கிரிய, மல்வத்த கூட்டு சங்க…
புதிய அரசியலமைப்போ, அரசியலமைப்பு திருத்தமோ இப்போதைய சூழலில் நாட்டுக்கு அவசியம் இல்லை என்று, மல்வத்த, அஸ்கிரிய பீடங்களின் கூட்டு சங்க சபா முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கண்டி- தலதா மாளிகையில் இன்று நடந்த துறைசார் நிபுணர்களுடனான கலந்துரையாடலை அடுத்தே, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக, இத்தகையதொரு…
தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுவிக்க வேண்டும் – நாடாளுமன்றில்…
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் உடனடியாக – எந்த தாமதமும் இன்றி சிறிலங்கா அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று ஒத்திவைப்பு வேளை பிரேரணைக் கொண்டு வந்து உரையாற்றிய போதே அவர்…
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதப்…
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆரம்பித்துள்ளனர். அநுராதபுரம் சிறையில் 20 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளும் வவுனியா நீதிமன்றத்துக்கு மாற்றப்பட வேண்டும் என்றும் கோரியும், தமிழ்…
அரசியல் கைதிகள் விவகாரம் சட்டமா அதிபருக்கு மாத்திரம் பொறுப்பானது அல்ல:…
தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் அரசியல் அடையாளங்களும் காணப்படும் நிலையில், அவர்கள் தொடர்பான வழக்குகள், சட்டமா அதிபருக்கு மாத்திரம் பொறுப்பானவையாகக் கருதப்பட முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கவுள்ள சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணையிலேயே இதனை வலியுறுத்தவுள்ளார். இப்பிரேரரணை…
இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடிப்போருக்கு சிறையும், 100 மில்லியன்…
இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவோருக்கு கடும் சிறைத் தண்டனையும், 100 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட அபராதமும் விதிக்கப்படும் என்று மீன்பிடி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கைக் கடற்படையினரின் பணிகளுக்கு இடைஞ்சல் விளைவிக்கும் வகையில் கலகங்களை முன்னெடுக்கும் இந்திய மீனவர்களுக்கெதிராக, கடற்படை சட்ட விதிமுறைகளுக்கமையவே எதிர்காலத்தில்…
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாடாளுமன்றில் பிரேரணை
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை தாமதமின்றி, விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் சமர்ப்பிக்கவுள்ளார். இந்தப் பிரேரணையின் உள்ளடக்கத்தை இரா.சம்பந்தன் நேற்று வெளியிட்டுள்ளார். அதில்,“பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்…
புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பயணத்துக்கு 100 வீத ஆதரவு: சம்பந்தன்
புதிய அரசியலமைப்பினை உருவாக்கி இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் பயணத்துக்கு 100 வீத ஆதரவினை வழங்குவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் தலைமையில் தேசிய தீபாவளி விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை அலரிமாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே…
‘பௌத்தம் வேண்டாம்’ என்று வடக்கு- கிழக்கு மக்கள் அன்றே நிராகரித்தவர்கள்:…
“வடக்கு- கிழக்கு மக்கள் பௌத்தம் வேண்டாம் என்று அன்றே நிராகரித்தவர்கள். அப்படியிருக்க, வடக்கு – கிழக்கை ‘பௌத்த நாடு’ என்ற அடைமொழியின் கீழ்க் கொண்டுவருவதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மற்றைய ஏழு மாகாணங்களிலும் பௌத்தர்கள் அதிகமாக வாழ்வதால் அவற்றில் பௌத்தத்திற்கு முன்னுரிமை…
சலப்பையாற்றில் 650 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றம்
திருகோணமலை – சலப்பையாறு பகுதியில், அனுராதபுர மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட 650இற்கு மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள், சிறிலங்கா அரசாங்கத்தினால் குடியேற்றப்பட்டுள்ளன. சலப்பையாறு பிரதேசம், தமிழ்ப்பேசும் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த பகுதியாகும். இங்கு யான் ஓயா திட்டம் என்ற போர்வையில், சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோமரங்கடவெல என்று…
வடக்கின் கலாசாரத்தை அழிப்பதற்கு சிங்கள, பெளத்த இனவாதம் துடிக்கிறது! –…
“கலாச்சாரத்தை அழிக்கும் நோக்கில் சிங்கள, பெளத்த இனவாதம் வடக்கில் அதிகமாகக் குடிகொண்டிருக்கிறது. எமது மக்களின் பொருளாதார வளங்களை கையகப்படுத்துவதன் ஊடாக இன்னொரு பக்க இனப்படுகொலையும் நடைபெற்று வருகின்றது.” – இவ்வாறு வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்தார். யாழ்.நாவற்குழி…
வடக்கில் அமைதியைக் குழப்புகிறது கூட்டமைப்பு – சிறிலங்கா அமைச்சர் குற்றச்சாட்டு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் அமைதியைக் குழப்பி வருவதாக சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன குற்றம்சாட்டியுள்ளார். பியகமவில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, “விளக்கமறியலில் உள்ள விடுதலைப் புலி சந்தேக நபர்க மோசமான குற்றங்களை இழைத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.…
சிறிலங்கா அதிபருக்கு யாழ்ப்பாணத்தில் கருப்புக் கொடியுடன் எதிர்ப்பு
யாழ்ப்பாணம் வந்துள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அருகே கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன யாழ். இந்துக் கல்லூரியில் நடக்கும் அகில இலங்கை தமிழ்மொழித் தின விழாவில் பங்கேற்கிறார். இதில் பங்கேற்பதற்காக, யாழ். வந்த சிறிலங்கா அதிபருக்…
தமிழ் அரசியல் கைதிகளை ‘பயங்கரவாதிகள்’ என்று பொய் கூறி தொடர்ந்தும்…
தமிழ் அரசியல் கைதிகளை ‘பயங்கரவாதிகள்’ என்று பொய் கூறி தொடர்ந்து தடுத்து வைக்க முடியாது. வழக்கு இல்லாதவர்களை துரிதமாக விடுதலை செய்ய வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு இந்தக் கைதிகள் தொடர்பில் அறிவித்துள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், அவர்களை விடுவிப்பதால்…
முற்றாக முடங்கியது வடக்கு மாகாணம்
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி இன்று நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்தினால் வடக்கு மாகாணம் முற்றாக செயலிழந்தது. வடக்கு மாகாணம் முழுவதிலும், போக்குவரத்து, வணிக மற்றும் அரச, தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் இன்று முழு அளவில் செயலிழந்திருந்தன.…

















