வெள்ளை வானுக்கும் கொலை பயமுறுத்தலுக்கும் முடிவு கட்டப்பட்டுவிட்டது: ஊடக அமைச்சர்

kayantha_karunaathilakaஇலங்கையில் வெள்ளை வான் அச்சுறுத்தல் மற்றும் கொலை அச்சுறுத்தலுக்கு முடிவு கட்டப்பட்டு விட்டதாக ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு இன்று காலை கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் இனி வெள்ளை வான் பின் தொடர்வது மற்றும் கொலை, கொலை பயமுறுத்தல்களுக்கு அஞ்ச வேண்டியதில்லை அவர்கள் சுதந்திரமாக தங்களது கடமைகளை செய்ய முடியும்.

வெகு விரைவில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு முடிவு கட்டப்படும் என்றும் கூறினார்.

-http://www.tamilwin.com

TAGS: