அன்வார் பிரதமரானால் நாட்டுக்கு என்ன கொடுப்பார்?

செப்டம்பர் 23, 2020 அன்று ஹோட்டல் லு மெரிடியன் கோலாலம்பூரில் டத்தோ ‘செரி அன்வர் இப்ராஹிமின் சிறப்பு ஊடக மாநாடு மலேசிய அரசியலில் சமீபத்தில் ஏற்பட்ட பூகம்பத்தைத் தூண்டியது.

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு பெரும்பான்மையான எம்.பி.க்களின் ஆதரவைப் பெற்றதாக அவர் கூறினார். அதே நேரத்தில் இது டான் ஸ்ரீ முஹைதீன் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணி அரசாங்கத்தின் சரிவை ஏற்படுத்தும்.

துன் டாக்டர் மகாதிர் உட்பட அவரது அரசியல் எதிரிகள் 2008 செப்டம்பர் 16 திட்டத்தின் தோல்வி குறித்து மக்களுக்கு நினைவூட்டுவதன் மூலம் சந்தேகங்களை விரைவாக எழுப்பினர்.
2008 ஆம் ஆண்டு GE-12 இல் ஏற்பட்ட அரசியல் சுனாமியின் பின்னர் அப்துல்லா அஹ்மத் படாவி தலைமையிலான பாரிசன் நேஷனல் அரசாங்கத்தை கவிழ்க்க அன்வர் தலைமையிலான பக்காத்தான் ராக்யாட் மேற்கொண்ட திட்டம்தான் செப்டம்பர் 16 திட்டம்.

ஏப்ரல் 14, 2008 அன்று, அன்வர் பகாத்தான் ரக்யாத் வெகுஜன கடத்தல் மூலம் ஒரு அரசாங்கத்தை அமைப்பதாக ஒரு எண்ணை உருவாக்கி வருவதாக அறிவித்தார். -மக பாரிசன் தேசிய எம்.பி.க்கள் பக்காத்தான் ரக்யாட்டுக்கு. அதிகாரப் பரிமாற்றத்திற்கான தேதி செப்டம்பர் 16, 2008 ஆகும்.

இருப்பினும், பக்காத்தான் ராக்யாட் ஆதரவாளர்களால் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அரசாங்கத்தின் மாற்றம் நிறைவேறவில்லை. ஓரளவிற்கு தோல்வி என்பது பக்காத்தான் ரக்யாத்தின் உண்மையான தலைவராக அன்வரின் நம்பகத்தன்மையை பாதித்தது.

செப்டம்பர் 16, 2008 திட்டத்தின் தோல்வியை இன்றைய நிகழ்வுகளுடன் ஒப்பிடுவது தேசிய கூட்டணி தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்களின் இதயத்தில் உள்ள வேதனையை குறைக்க ஒரு சுலபமான வழியாகும். இருவருக்கும் பின்னணியை முன்னிலைப்படுத்துவதன் மூலம், 12 ஆண்டுகளுக்கு முன்பு “திட்டம் 16 செப்டம்பர்” இலிருந்து “லு மெரிடியன் படி” ஐ வேறுபாடுகள் உள்ளன. வேறுபாடுகள் பின்வருமாறு:

2008 ஆம் ஆண்டில், எதிர்க்கட்சிக்கு 82 நாடாளுமன்ற இடங்கள் மட்டுமே இருந்தன, மேலும் 112 இடங்களின் எளிய பெரும்பான்மையை அடைய குறைந்தது 30 இடங்கள் தேவைப்பட்டன.
இந்த முறை அன்வருக்குத் தேவையான தொகையுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை மிகப் பெரியது.

முஹைதீனுக்கு இருக்கும் பெரும்பான்மை நன்மை இரண்டு அல்லது மூன்று இடங்கள் மட்டுமே என்பது பொதுவான அறிவு. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், எண்கள் விளையாட்டின் பார்வையில், இந்த நேரத்தில் இலக்கு இன்னும் அடையக்கூடியது அல்லதுஅன்வார் பிரதமரானால் நாட்டுக்கு என்ன கொடுப்பார்?
நாட்டில் தினம், தினம் அரசியல் சுனாமி.

“யாரை எங்கு வைப்பதென்று யாருக்கும் புரியலே அண்ணன் தம்பிக்கும் பேதம் விளங்கலே” என்ற ஒரு பழையப்பாடல்.

பாக்காத்தான் அரப்பானுக்கு வாக்களித்த நாட்டு மக்கள் வெம்பி, வெறுக்கம் அளவிற்கு மகாதீரும் பிறகு முகைதீனும் அபூர்ப ஆட்டம் காட்டினர். பிறகு சபாவில் அரசு, அரசியல் கொந்தளிப்பு. இதெற்கெல்லாம் பேர் சனநாயகமாம்.
மீறினால் அரசியல் அமைப்பு சட்டம் என்கிறார்கள்.

திருட்டு வழி , பின் கதவு வழி, நம்பிக்கை துரோகம், விசுவாசம், பதவி வெறி, கட்சி துரோகம், ஆளுமை இயலாமை இப்படி சாணக்கிய சான்றிதழ்கள் கொடுத்துக்கொண்டே போகலாம்.
நடப்பில் 2021 பொருளாதார பட்ஜட் வரப்போகிறது. கோவிட்டின் இழப்பு குடும்பத்தையும், குழுமங்களை திணரடித்து மனிதனும்,மனிதமும் செத்துக் கொண்டுதான் விகிதாச்சார வியப்பில் ஆடுபுலி ஆட்டம் போல் வித்தைக் காட்டுகிறது.
உலக சுகாதாரம், உலக பொருளாதாரம், சீனா அமெரிக்கா மருந்து சண்டை, இடையில் இந்தியா மோடி மெத்தனம் என்று வல்லாதிக்க முதலாளித்துவ போட்டிகள்.

மலேசியாவை பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றிய போது நாட்டின் வெளி நாட்டுக் கடன் 1.2 திரிலியன்.
பெரியிக்காதான் நேசனல் எடுத்தபோது நாட்டின் கடன் நிலை இது வரை தெரியவில்லை. சமுராய் போண்டு, கிரிக்ஷ் போண்டு எல்லாம் கமுக்கு அமுக்காகத்தான் உள்ளது. இருந்தாலும் கோவிட் ஊக்க நிதிகள் பல அனுகூலங்களை மக்களுக்கு தந்துக் கொண்டுதான் உள்ளது.

கொடுத்த நஜீப்க்கு நன்றி சொல்வதா? கெடுத்த மகாதீருக்கு நன்றி சொல்வதா? எடுத்த முகிடீனுக்கு நன்றி சொல்வதா?
இந்த முப்பெரும் அரசியல் அராஜாகத்தில் நான்காவது நல்வினை நாயகன் வரப்போவதாக ஊடகங்கள் உருமாறி ஒப்பணை நடத்துகின்றன!

என் கட்சித்தலைவர் வந்தால் நல்லது என கோலரை தூக்கித்திரியும் சாம்பவான்களின் கதை மெய்ப்பட வேண்டும்.
அனால்:…. அரசு, அரசியல் மட்டும் பேசும் அன்வார் அவர்களுக்கு பெரிய, பெரிய பூலோகச் சவால்கள் இருப்பதை அவர் அறிவார். முன்னாள் நிதி அமைச்சர்,பின்னாள் துணைப் பிரதமர்,இன்னாள் பாக்காத்தான் அரப்பானுக்கு தலைவர் என்ற தகுதிகளுக்கெல்லாம் நீதியாளர் என்றாலும்….நாட்டின் பொருளாதார அரசியலில் சமாளிக்க திட்டம்தான் என்ன என்று யாரும் கேட்கவில்லை ஏன்?

நாடும் உலகமும் போகிற அரசியல் பொருளாதார சிக்கல் போக்கில் எங்களுக்கு பிரதமரோ நாடாளுமன்ற தேவர்களோ முக்கியமல்ல ! அடுத்த பொதுத்தேர்தல் வரை நிலையான அரசும், தரமான தார்மீக பல்லின அரசியல் பிரதநிதிகளும் வேண்டும்.

நம் சமூகத்தை, நம் பொருளாதரத்தை யார் மீட்சியுற செய்யப்போவது. அன்வார் என்றால் என்ன திட்டம் வைத்துள்ளார் என்று யாரும் இது வரை கேட்கவில்லை. அவரும் சொன்ன பாடில்லை.
நானும் கட்சிக் காரந்தான். இடைத்தேர்தல் தேவையில்லைதான். 100 மில்லியனை தேர்தலில் கொட்டிகுப்பையாக்கவேண்டாம்தான்.கோவிட்டில் நாம் தவிக்கும் போது ஏன் இந்த கோவிந்தா வேலை.
நமக்கு பலவீனமான அரசோ பலமான அரசிலோ இபோது வேண்டாம். மக்கள் தேர்வு செய்தவர்கள் பதவிக்கு அதிகாரத்தை விற்றார்கள். அன்வார் பதவிக்கு வந்தால் இவர்கள் வாங்க, விற்கப்பட மாட்டார்கள் என்பதில் துளியும் நமக்கு நம்பிக்கையில்லை !

இதற்குப் பல காரணங்களை முன் வைக்கலாம். சபா தேர்தலுக்கு பின்தான் முகிடின் அரசியல் படிகள் ஏற்றமா இறக்கமா என்று கணிக்க முடியும். என்றாலும் நாட்டின் பொருளாதார மீட்சிப்படிகள் அவ்வளவுக்கு சீக்கிரமாக பிரகாசமான மாற்றத்தை கொண்டுவராது.

மக்களுக்கு தேவை முன்பு போன்ற பொருளாதார நிலைத்தன்மை.
மக்களுக்கு அரசியல் வாதிகளின் சுனாமித்தனம் புரிந்து விட்டது. நாளைக்கு கஞ்சி குடிக்க இன்று கடைக்கு போகணும் என்ற கவலை 90% சகித ஏழைகளுக்கு போராட்டமாக உள்ளது.

அன்வாருக்கு 125 சீட் உண்டு என்பது மக்களுக்கு தேவையில்லாத வினோதம்.அதே அவர்களை வைத்துக் கொண்டு என்ன செய்யப்போகிறார்? என்ற கேள்வியும் கொக்கி போல் தொக்கி நிற்கிறது.
100 நாட்களையும் 25 வாக்குகளையும் மக்கள் மறக்கவில்லை…! அன்வார் முடிப்பார் என்று நம்புவோம்.