யாழில் ரயிலில் மோதி பலியான 24 வயது யுவதி – காப்பாற்ற சென்ற தந்தைக்கு நேர்ந்த கதி

யாழில் ரயில் கடவையை சைக்கிளில் கடக்க முற்பட்ட யுவதி ஒருவர் ரயிலில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து யாழ்ப்பாணம், கொக்குவில் ரயில் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது குறித்த யுவதியை காப்பாற்ற முயன்ற அவரது தந்தை ரயிலில் அடிபட்டு பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயிலில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

ரயில் கடவையை சைக்கிளில் கடக்கும் போது ரயில் வருவதை யுவதி அவதானிக்கவில்லை எனவும், ரயில் வருவதை கண்ட யுவதியின் தந்தை ஓடிச் சென்று தனது மகளை காப்பாற்ற முயன்ற போது தந்தையும் ரயிலில் அடிபட்டு தூக்கி வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்தில் யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tamilwin