இலங்கையில் விமான பயணச் சீட்டு கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாக அறிவிப்பு

இலங்கையில் அனைத்து வகையான விமான பயணச் சீட்டுகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் குறித்த அதிகாரசபை மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் விநியோகிக்கப்படும் அனைத்து வகையான விமான பயணச் சீட்டுகளுக்கான கட்டணங்கள் 27% இனால் அதிகரிக்கப்படவுள்ளன.

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இந்த கட்டண அதிகாிப்பு நடைமுறைக்கு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

Tamilwin