ராஜபக்சவினர் பதவி விலகுவதை விட மாற்றுவழி கிடையாது – துஷார இந்துனில்

ராஜபக்சவினர் பதவி விலகுவதை விட வேறு மாற்றுவழி கிடையாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் (Thushara Indunil) தெரிவித்துள்ளார்.

நாட்டின் நெருக்கடி நிலை தொடர்பில் கருத்து வெளியிடுகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“ மிக மோசடி அவமதிப்புக்கு உள்ளாகி இருக்கும் அரசாங்கம் பல வாக்களைப் போட்டு, பலரை பணம் கொடுத்து வாங்கி, தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க தோல்வியான முயற்சியை மேற்கொண்டு வருகின்றது.

இதனால், மக்களின் போராட்டத்தை திசை திருப்ப அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்தி வருகிறது.

உலகம் முழுவதும் ராஜபக்சவினருக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், போராட்டங்கள் பல நாட்களாக தொடர்ந்தும் நடைபெறும் சூழ்நிலையில், இவர்கள் ஒவ்வொரு வழிமுறைகளை கையாண்டு வருகின்றனர்.

 

 

IBC Tamil