இக்கட்டான தருணத்தில் சிறிலங்காவிற்கு கைகொடுத்த இரு நாடுகள்

நாட்டில் தற்போது மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் இந்தியா மற்றும் இந்தோனேஷியா குறிப்பிட்ட தொகை மருந்துகளை நன்கொடையாக சிறிலங்காவிற்கு வழங்க முன்வந்துள்ளன.

இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்படவுள்ள 101 வகையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை பொருட்கள் என்பன எதிர்வரும் புதன்கிழமை (27) சிறிலங்காவை வந்தடையவுள்ளன.

அதேவேளை, இந்தோனேஷிய அரசாங்கத்தின் நன்கொடையின் கீழ், 340 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களும் ஒரு வாரத்திற்குள் கிடைக்கபெறவுள்ளதாக, சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

 

 

IBC Tamil