நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி- சீன பிரதமர் வழங்கியுள்ள உறுதி மொழி!

நாடு தற்போது எதிர்நோக்கும் சில அவசர நிதிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இலங்கை அரசாங்கத்துடன் சீனா இணைந்து செயற்படும் என்று சீன பிரதமர் உறுதியளித்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது சீன பிரதமர் லீ கெகியாங் இந்த உறுதிமொழியை வழங்கியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த சீனா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என இலங்கை அரசாங்கத்திற்கு சீனப் பிரதமர் உறுதியளித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள், சீன சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பது தொடர்பான பல விடயங்கள் குறித்தும் இரு தலைவர்களும் கலந்துரையாடினர்.

 

 

IBC Tamil