இலங்கைக்கு 600 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்குகிறது உலக வங்கி

இலங்கைக்கு 600 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க உலக வங்கி இணங்கியுள்ளது என அரச தலைவர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் முதற்கட்டமாக 400 மில்லியன் டொலர்கள் விரைவில் வழங்கப்படுமென உலக வங்கியின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி சியோ கண்டா தெரிவித்துள்ளார்.

உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்கும் இடையில் இன்று பிற்பகல் கொழும்பு கோட்டையில் உள்ள அரச தலைவர் மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே சியோ கண்டா இதனைத் தெரிவித்தார்.

 

 

IBC Tamil