எந்த தீர்மானங்களையும் எதிர்கொள்ள நான் தயார் – பிரதமர் மகிந்த

நாட்டில் அராஜகங்களுக்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது எனவும், நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு எடுக்கப்படும் தீர்மானங்களை எதிர்கொள்ள நான் தயார் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஓமல்பே சோபித தேரர் தலைமையிலான மஹா சங்கத்தினரை இன்று பிற்பகல் அலரி மாளிகையில் சந்தித்த போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில் இதன்போது மஹா சங்கத்தினர் தங்களது கருத்துக்களை தொவித்தனர்.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை அவசியம் என்றும், அதனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டை அராஜக நிலைக்கு இட்டுச்செல்வதற்கு தாம் இடமளிக்கப் போவதில்லை என்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சந்திப்பின் போது ஓமல்பே சோபித தேரர், அகலகொட சிறிசுமன தேரர், ரஜவத்தே வப்ப தேரர், பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் கலந்து கொண்டிருந்தனர்.

 

 

IBC Tamil