நாட்டை வந்தடைந்த 28 மில்லியன் பெறுமதியான மருந்து பொருட்கள்

சீனாவின் அன்பளிப்பிலான அத்தியாவசிய மருந்து பொருட்கள் தாங்கிய விமானம் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளது.

14 அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்ட 28 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்து பொருட்களும், மருத்துவ உபகரணங்களும் அதில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹொங்கொங்கில் இருந்து பி – 747 என்ற விமானத்தினூடாக இந்த மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்கள் நேற்றிரவு நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனை இலங்கைக்கான சீன தூதுவர், சுகாதார அமைச்சர்கெஹலிய ரம்புக்வெல்லவிடம்  கையளித்ததாக குறிப்பிடப்படுகின்றது.

 

 

IBC Tamil