நெருக்கடியில் கரம் கொடுத்த நாடுகளுக்கு இலங்கை நன்றி தெரிவிப்பு

இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் வழங்கி வரும் உதவிகளுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு நன்றிகளை தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, உணவு, எரிபொருள், உரம் மற்றும் மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் உட்பட இலங்கைக்கு தற்போது வழங்கப்படும் உதவிகள் குறித்து இந்திய உயர்ஸ்தானிகர் வெளிவிவகார அமைச்சருக்கு விளக்கமளித்தார்.

இதேவேளை, சீனா வழங்கி வரும் உதவிகளுக்கும் ஆதரவுகளுக்கும் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கான சீனத் துாதவருக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் கூறியுள்ளார்.

இலங்கையின் பொருளாதார சவால்களை தணிப்பதற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்குமாறு சீன அரசாங்கத்திடம் வெளிவிவகார அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

IBC Tamil